ஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்

ஆகஸ்ட் 20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யபடும் என மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில்  குமார சாமி தலைமையில் இருந்த காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை  தொடர்ந்து பாஜக  ஆட்சி அமைந்தது. கடந்த ஜூலைமாதம் 26ம் தேதி மாநில  முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அதைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம்  நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டாலும் இதுவரை அதற்கு நேரம்  வாய்க்கவில்லை. வட கர்நாடகாவில் பலத்தமழை, காஷ்மீர் மாநிலம் பிரிப்பு, எம்எல்ஏ பதவி இழந்த 17 பேர்களின் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது ஆகியவற்றால் அமைச்சரவை விரிவாக்கம் தாமதமானது.

இந்நிலையில்,இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, நாளை மறுநாள் 20-ம் தேதி கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், பாஜக  சட்டமன்ற கட்சிகூட்டம் அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பின்பே நடைபெறும் என்றும் எடியூரப்பா தகவல்தெரிவித்தார். கர்நாடகா அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய கட்சிமேலிட அனுமதி பெற்றதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே,  கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, எனது தலைமையில் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது அதிருப்தி எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரின்  தொலை பேசிகளை ஒட்டுக்கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்தவிவகாரத்தில் என்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆட்சியை இழந்தபிறகு, இந்த விவகாரத்தில் என்மீது புகார் கூறுவது ஏன்? பாஜக ஆட்சி நடைபெறுவதால் இந்த விவகாரம்  குறித்து உரிய விசாரணை நடத்தவேண்டும். தகுதிநீக்கம் செய்யப்பட்ட மஜத முன்னாள் எம்எல்ஏ எச்.விஸ்வநாத் என் மீது இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளதாகத்தெரிகிறது.

அதுகுறித்து எந்தக்கருத்தும் தெரிவிக்க நான் விரும்பவில்லை. கடந்தாண்டில் ஒருசிலர் என்னிடம் எப்படி நடந்து கொண்டுள்ளனர் என்பதனை நான் அறிவேன். ஆனால், யாரைப்பற்றியும் இப்போது நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை.  தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளியேதெரியவரும் என்றார்.  இதற்கு இன்று பதிலளித்த மாநில முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் உள்பட பலர் தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக புகார் கொடுத்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்களின் தொலைபேசி ஓட்டுகேட்கப்பட்டது  தொடர்பானபுகாரை சிபிஐ விசாரிக்கும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...