ஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்

ஆகஸ்ட் 20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யபடும் என மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில்  குமார சாமி தலைமையில் இருந்த காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை  தொடர்ந்து பாஜக  ஆட்சி அமைந்தது. கடந்த ஜூலைமாதம் 26ம் தேதி மாநில  முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அதைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம்  நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டாலும் இதுவரை அதற்கு நேரம்  வாய்க்கவில்லை. வட கர்நாடகாவில் பலத்தமழை, காஷ்மீர் மாநிலம் பிரிப்பு, எம்எல்ஏ பதவி இழந்த 17 பேர்களின் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது ஆகியவற்றால் அமைச்சரவை விரிவாக்கம் தாமதமானது.

இந்நிலையில்,இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, நாளை மறுநாள் 20-ம் தேதி கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், பாஜக  சட்டமன்ற கட்சிகூட்டம் அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பின்பே நடைபெறும் என்றும் எடியூரப்பா தகவல்தெரிவித்தார். கர்நாடகா அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய கட்சிமேலிட அனுமதி பெற்றதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே,  கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, எனது தலைமையில் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது அதிருப்தி எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரின்  தொலை பேசிகளை ஒட்டுக்கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்தவிவகாரத்தில் என்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆட்சியை இழந்தபிறகு, இந்த விவகாரத்தில் என்மீது புகார் கூறுவது ஏன்? பாஜக ஆட்சி நடைபெறுவதால் இந்த விவகாரம்  குறித்து உரிய விசாரணை நடத்தவேண்டும். தகுதிநீக்கம் செய்யப்பட்ட மஜத முன்னாள் எம்எல்ஏ எச்.விஸ்வநாத் என் மீது இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளதாகத்தெரிகிறது.

அதுகுறித்து எந்தக்கருத்தும் தெரிவிக்க நான் விரும்பவில்லை. கடந்தாண்டில் ஒருசிலர் என்னிடம் எப்படி நடந்து கொண்டுள்ளனர் என்பதனை நான் அறிவேன். ஆனால், யாரைப்பற்றியும் இப்போது நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை.  தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளியேதெரியவரும் என்றார்.  இதற்கு இன்று பதிலளித்த மாநில முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் உள்பட பலர் தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக புகார் கொடுத்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்களின் தொலைபேசி ஓட்டுகேட்கப்பட்டது  தொடர்பானபுகாரை சிபிஐ விசாரிக்கும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...