காங்கிரசும் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையிடம் பாகிஸ்தான் சமர்ப்பித்த கோரிக்கை மனுவில்  காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையின் காரணமாக அங்கு உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதை, இந்தியாவின் முக்கிய எதிர்க் கட்சி தலைவரான ராகுல்காந்தி கூட உறுதிப்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும்புயலைக் கிளப்பியுள்ளது.

அதையடுத்து காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தினை பதிவு செய்திருந்தார்.

இதுதொடர்பாக  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை விமர்சித்து காங்கிரசின் ராகுல்காந்தி பேசியது வெட்கக்கேடானது.

ராகுல் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கருத்து தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தேசமே கொந்தளித்து எழுந்ததன் விளைவு இது. அரசியல் கட்டாயங்களின் காரணமாகவே இது நிகழ்ந்துள்ளது.

அத்துடன் காஷ்மீருக்கு எதிர்க் கட்சி தலைவர்களை அழைத்துக் கொண்டு ராகுல்காந்தி சென்றது பொறுப்பற்ற செயல் .

நாட்டையே அவமானப்படுத்தி யுள்ளதன் காரணமாக காங்கிரசும் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...