காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில், மத்தியஅரசின் நடவடிக்கைக்கு, இந்தியாவின் பெரிய முஸ்லிம் அமைப்பான, ஜமியாத் உலாமா-ஐ-ஹிந்த் என்ற முஸ்லிம் அமைப்பு ஆதரவுதெரிவித்துள்ளது. காஷ்மீர், இந்தியாவின் ஒரு அங்கம் என தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.
அந்த அமைப்பு நிறைவேற்றிய தீர்மானத்தில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்தபகுதி. பிரிவினைவாத அமைப்புகளை ஆதரிக்க முடியாது. இந்தஇயக்கங்கள் இந்தியாவிற்கு மட்டும் அல்ல. காஷ்மீர் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.
காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணையும் போதுதான் அவர்களின் வாழ்க்கை மேம்படும். பாகிஸ்தான், காஷ்மீர் மக்களை கேடயமாக பயன் படுத்தி, காஷ்மீரை போர்க்களமாக மாற்றியது கண்டனத்திற் குரியது.
பாகிஸ்தானின் நடவடிக்கைகள், காஷ்மீர்மக்களை இடர்பாடுகளில் இருந்து மீட்பதற்கும் சிக்கலாக உள்ளது. அனைத்து ஆக்கப்பூ ர்வமான நடவடிக்கைகள் எடுத்து, காஷ்மீரில் இயல்பு வாழ்க்கையும் அமைதியும் திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறபட்டுள்ளது.
தீர்மானம் குறித்து, அந்த அமைப்பை சேர்ந்த மெகமூத் மதானி கூறுகையில், இந்தியாவில் முஸ்லிம்கள் துன்புறுத்தப் படுவதாக ஒரு தோற்றத்தை, சர்வதேச அளவில் ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. இந்த நடவடிக்கைக்கு, நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம் என்றார்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம் அமைப்புகளில், ஜமியாத் உலாமா-ஐ-ஹிந்த் அமைப்பு பெரியது. இதன்தலைவர் மவுலானா சையத் அர்ஷத் மதானி கடந்த வாரம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்தார். அப்போது, ஹிந்து – முஸ்லிம் மக்கள் இடையே ஒற்றுமையை பலப் படுத்துவது, கும்பலால் அடித்து கொல்லப்படும் சம்பவங்களை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |