அமித்ஷா தவறாக சொல்லவில்லையே

அமித்ஷா பேசியதை முழுவதுமாக செய்தித்தாளில் படித்து விட்டு இதை எழுதுகிறேன். செய்திகளுக்கு தலைப்பிடுவதில் தமிழக ஊடகங்கள் சில அல்லது பல எவ்வளவு அயோக்கியத்தனமான போக்கினை கொண்டிருக்கின்றன என்றும் அது கூட புரியாத முட்டாள்கள் எத்தனை பேர் இங்கே உலாவிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் புரிகிறது அவர் சொன்னது மிகவும் சரி. அதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நான் அதை ஆதரிக்கிறேன்.

அவர் கூறி இருப்பது, ஒவ்வொருவரும் தன் தாய்மொழிக்கு முதன்மை தர வேண்டும். எதற்கு எடுத்தாலும் ஆங்கிலத்தை தூக்கி கொண்டு திரிய வேண்டாம். இரு தமிழர்கள் சந்தித்தால் தமிழில் உரையாடுங்கள். இரு வங்காளிகள் வங்காளத்தில் உரையாடுங்கள்.தமிழரும் வங்காளரும் சந்திக்கும் போது?

ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று சொல்பவர்களைத் தான் சாடி இருக்கிறார். ஏனெனில் அந்த ஆங்கில மோகம் தமிழையும் அழிக்கிறது, வங்காளத்தையும் அழிக்கிறது. இணைப்பு மொழியாக ஏதாவது ஒன்று வேண்டும் எனும்போது ஆங்கிலத்தை தேர்ந்தெடுக்காமல் ஹிந்தியை தேர்ந்தெடுங்கள் என்கிறார். ( அது சரியா தவறா என்பது வேறு விவாதம். அதை பிறகு பார்ப்போம்) ஒரு அந்நிய மொழியான ஆங்கிலம் ஏன் நம்மை இணைக்க வேண்டும்? நம் தேசத்து மொழிகளில் ஒன்று நம் இணைப்பு மொழியாக இருக்கக்கூடாதா என்கிறார்.

ஆனால் இங்கே என்ன விவாதம் ஓடுகிறது? தமிழை அழிக்கப் பார்க்கிறார் அமித் ஷா என்று கதறிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு தான் இவர்கள் அறிவும் நேர்மையும்.
ஆங்கிலத்தை அழிக்கப்பார்க்கிறார் உள்துறை அமைச்சர் என்று சொல்லி விவாதம் செய்தால் அது சரியானது. வரவேற்கத்தக்கது. அந்த விவாதம் நடக்க வேண்டும். ஆனால் தமிழ் உட்பட எந்த பிராந்திய மொழி குறித்தும் அவர் எதிர்ப்பாக பேசவில்லை.

ஆனால் ஆங்கிலம் என் தகப்பன் மொழி, அது அழிய விட மாட்டோம் என்று இங்கே யாராலும் வெளிப்படையாக சொல்ல முடியாத காரணத்தால் சம்பந்தமே இல்லாமல் தமிழன்டா கோஷம் போடுகிறார்கள்.

மூளை உள்ளவன் தனியே சிந்தித்து பார்ப்பான். மூளை இல்லாதவன் கூட்டத்துடன் நின்று கோஷம் போடுவான் .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...