தமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்டும்

தமிழ்மொழி குறித்த பிரதமர் மோடியின் கருத்தை தமிழர்கள் பாராட்டாதது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து சென்னையில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:-உலகத்திலேயே மிகப்பழைமையான மொழியாக தமிழை பெற்றிருப்பதில் நாம் பெருமைப் படுகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி பலமுறை கூறியிருக்கிறார்.

இந்த வார்த்தையை எந்தப்பிரதமரும் கூறியதில்லை. சம்ஸ்கிருதத்தைவிட பழைமையான மொழி தமிழ் எனத் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் உள்ளவர்களே இதைச்சொல்வது கிடையாது. தமிழ் ஆர்வலர்கள் சொன்னதில்லை. இதற்காக தமிழகம் அவரை கொண்டாடியிருக்க வேண்டும்.

தமிழ்மீது நமக்கு உண்மையாக பற்று இருக்குமானால், ஓராண்டு முழுவதற்கும் அந்த கருத்தை வைத்து கொண்டாடி இருக்கவேண்டும். ஏன் கொண்டாடவில்லை. உலகத்தில் தமிழை தூக்கிநிறுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியகருத்தை ஏன் கொண்டாடவில்லை.

இதனை விட தமிழுக்கு யார் கௌரவம்கொடுக்க முடியும்.  பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை  ஒருதொடக்கமாக வைத்துக் கொண்டு நாம் எவ்வளவோ முன்னேறி இருக்க முடியும். தமிழை எந்த அளவுக்கும் கொண்டு போய் இருக்க முடியும் என்றார் பொன் ராதாகிருஷ்ணன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...