9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறை

புரட்டாசி மாதம் வரும் மஹாளயபட்ச அமாவாசை பித்ருக்களுக்கு விசேஷமானது. இந்த அமாவாசை முடிந்த உடன் வரும் பிரதமை திதியில் இருந்து நவமி வரை வரும் திதியில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்ததேதிகளில் கோவில்கள் வீடுகளில் அம்பிகை வழிபாடு களை கட்டும், கொலு வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒருபெண் தெய்வமாக நினைத்து ஆராதிப்பார்கள்.

முதல் நாளில் அன்னை மகேஸ்வரியாக அம்பிகை காட்சிதருவாள். அன்றைக்கு அவளை மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்க வேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம்

இரண்டாம் நாளன்று கௌமாரி ரூபத்தில் காட்சிகொடுக்கிறாள் அதனால் முல்லை, துளசி கொண்டு அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் செய்யவேண்டும்.

மூன்றாம் நாள் வராகியாக காட்சிதருகிறாள் கடும் தடைகளை உடைப்பவள் வராஹி அதனால் செண்பகம் மற்றும் சம்பங்கி மலர்கள் கொண்டு இவளுக்கு பூஜை செய்யவேண்டும் சர்க்கரை பொங்கல் படைக்க வேண்டும்

நான்காம் நாள் மகாலட்சுமியாக காட்சியளிக்கிறாள் மஹா லட்சுமி தரிசனம் சகல சுபிட்சத் தையும் தரும் அதனால் மல்லிகை பூக்களால் அலங்காரம்செய்து, அன்னம் நைவேத்தியம் பண்ண வேண்டும்.

ஐந்தாம் நாளில் வைஷ்ணவி தேவியாக காட்சி அளிக்கிறாள் பராசக்தி அம்பிகை.அன்று முல்லைப் பூ அலங்காரமும் தயிர்சாதமும் இவளுக்கு படைத்து வணங்கலாம்

ஆறாம் நாள் இந்திராணி தேவியாக காட்சிகொடுக்கும் தேவிக்கு ஜாதி பூ உகந்தது.

ஏழாம் நாளில் சரஸ்வதியாக அன்னை காட்சி கொடுக்கிறாள் அன்று அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்யவேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்யலாம்

எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபத்தில் காட்சிதருகிறாள் அம்பிகை. இவளுக்கு உகந்த மலர் ரோஜா மலர் சூடி, சர்க்கரை பொங்கல் படைக்கலாம்

ஒன்பதாம் நாள் சாமுண்டியாக காட்சிதருகிறாள் அன்று பால்பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

இத்துடன் தினமும் சுண்டலும் நிவேதனம் செய்ய வேண்டும்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...