நவராத்திரி இரண்டாம் நாள்: தேவி பிரம்மசாரிணி!

ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் குழந்தை தனமான ஆர்வங்களை வெளியே கொண்டுவரும் ஓர் அற்புத தருணமே இந்த நவராத்திரித் திருவிழா என்றால் அதுமிகையாகாது. ஆயிரம் கதைகளை சொல்லும் பொம்மைகளை குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள்வரை விரும்பாதவர்களே கிடையாது. பெண் குழந்தைக்கு பர்பிகேள் என்றால், ஆண் குழந்தைக்கு கார்பொம்மை, கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு குழந்தைவடிவம் கொண்ட பொம்மை

அந்தளவுக்கு உணர்வுகளோடு கலந்திருக்கும் பொம்மைகளை வைத்து கொண்டாடும் விழா. நவராத்திரியின் இரண்டாம் நாள்  அம்பிகையை மூன்று வயது பெண் குழந்தையாகப் பாவித்துப் பூஜிக்க வேண்டும். கொலுவில் வீற்றிருக்கும் அம்பிகையை திரிபுரா அல்லது வராஹி என்ற பெயருடன் இன்றுவழிபட வேண்டும். நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளில் வணங்கப்படும் துர்க்கை பிரம்மசாரிணி தேவியாக வணங்கப்படுகிறது.

அம்பிகைக்கு கோதுமைமாவால் கட்டம் கோலம்போட்டு, ஜவ்வாதால் பொட்டு வைத்து, முல்லைப்பூ மாலை அணிவித்து, முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் படைத்து, நைவேத்தியமாக புளியோதரையை படைத்து, மகா விஷணுக்கு உகந்த துளசியைக் கொண்டு அம்பிகைக்கு அர்ச்சனை செய்து குமாரிதிரிபுராவை வணங்க வேண்டும். ஏதாவது நவதானியத்தில் செய்தசுண்டலை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து, அதை வீட்டிற்குவரும் பெண்களுக்கு தாம்பூலத்துடன் சேர்த்து அளிக்க வேண்டும்.

இவ்வாறாக இரண்டாம் நாளில், அம்பிகையை வழிபட்டால் தனம், தானியம் மட்டுமின்றி குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்கியமும் கிட்டும். துர்க்கை பிரம்மசாரிணிக்கான அர்த்தம் ‘பிரம்ம’ என்றால் தபஸ் அதாவது தவம்செய்தல் என்று பொருள். அம்பிகை மிக எளிமையாக காட்சிதரும் இந்த பிரம்மசாரிணியின் வலதுக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது. இந்த துர்க்கைக்கு வாகனம் ஏதும் இல்லை. பூமியில் நடப்பவளாக இவள் காட்சிபடுத்தப்படுகிறாள்.சிவபெருமானை திருமணம் செய்யும்பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக கடும்தவம் புரிந்தார். இவரின் தவ உக்கிரம் மூன்று உலகங்களையும் உலுக்கியது. இறுதியில் சிவபெருமான் பிரம்மசாரிணியை திருமணம் புரிந்தார் என்று புராணங்கள் கூறுகிறது.

அறிவு, ஞானம், நன்றி நிறைந்த பிரம்மச் சாரிணியை வணங்குவதன் மூலம் பொறுமையைத்தர வல்லவள். அதோடு சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லவர். துன்பமான நேரத்திலும் மணம்தளராது இருக்க அருள்பவள். மனித உடலில் உள்ள முக்கியமான ஏழுசக்ரங்களில், உணர்வுகளோடு தொடர்புடைய ‘ஸ்வாதிஷ்தானம்’ சக்ரத்தில் இருப்பவள். இரண்டாம் நாள் யோகிகள் இவளின் அனுகிரகத்தால் இந்த சக்ரத்தை அடைவர். இவளுக்கான மந்திரம்!


ததாநகர பத்மபியம் அக்ஷமாலா கமண்டலம்

தேவி பிரசிதட்டு மயி பிரம்மசாரின நுத்தன

கமண்டலமும், தண்டமும் தன் தாமரை கரத்தில் ஏந்தியவளும் பிரம்மஸ்வரூபம் அடையும் எண்ணம் கொண்டவளுமாம் அன்னை பிரம்மச்சாரிணி எனக்கு அருளவேண்டும் என்று அர்த்தமாகும். இவளுக்கான கோயில் பாரத தேசத்தின், தென்மாநிலத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரில் அன்னை பிரம்மச்சாரிணியாக அருள் புரிகிறாள்.

மாணிக்கத்திற்கான பாடல்!

காணக் கிடையா கதியானவளே கருதக் கிடையாக் கலையானவளே பூணக்கிடையாப் பொலிவானவளே புனையக் கிடையாப் புதுமைத்தவள் நாணித்திரு நாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாதவளே மாணிக்க ஒளிக்கதிரே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே..

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...