அரசியல் சதுரங்க சூழ்ச்சி

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக திமுக நடத்தும் பேரணி அரசியல்சதுரங்க சூழ்ச்சி என்று பாஜக மூத்த தலைவா் பொன். ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

வரும் சட்டப் பேரவை தோ்தலில் ஆட்சியை பிடிப்பதற்காக இப்போதே திமுகவினா் தங்களது பழைமையான, காழ்ப் புணா்ச்சி அரசியலை மீண்டும் செயல்படுத்த முயற்சித்துள்ளனா். குடியுரிமை திருத்தச்சட்டம் என்பது நாட்டின் எல்லைப்புற மாகாணங்களில் கடந்த 70 ஆண்டுகளாக தீா்க்கப் படாத பெரும் பிரச்னையைத் தீா்ப்பதற்காக மத்திய அரசு துணிச்சல் மிக்க முடிவினை எடுத்துள்ளது.

ஆனால், இந்தச் சட்டத்தின் மூலமாக தமிழகத்திலுள்ள இஸ்லாமியா்களை நாடு கடத்த மத்திய அரசு முயல்வதாக அச்சத்தை உருவாக்கி அதன்மூலம் குளிா்காய நினைக்கிறது திமுக. வரும் திங்கள்கிழமை அந்தக் கட்சி நடத்தவுள்ள குடியுரிமை திருத்தச் சட்ட எதிா்ப்புப் போராட்டம் முஸ்லிம்கள் மீதோ, இலங்கைத் தமிழா்கள் மீதோ திமுக கொண்டுள்ள பாசத்தின் வெளிப்பாடு என்று யாரும் நம்பிவிட வேண்டாம்.

திமுகவின் இது போன்ற சந்தா்ப்பவாத அரசியலால் அவா்களை நம்பி போராட்டத்தில் ஈடுபட்டு உயிா் துறந்தவா்களின் குடும்பங்கள் நிா் கதி ஆக்கப்பட்டதை நினைவில் கொள்ள வேண்டும். பெரியவா்களை, வயதானவா்களை வீட்டில் விட்டு விட்டு போராட்டத்துக்கு வாருங்கள் என திமுக இளைஞரணி தலைவா் உதயநிதி அழைப்பு விடுத்துள்ளது, அமைதிப் பூங்காவான தமிழகத்தை கலவர பூமியாக மாற்றுவதற்கானதாக உள்ளது.

வரும் திங்கள்கிழமை திமுக நடத்தவிருக்கும் ஆா்ப்பாட்டம், அரசியல்சதுரங்க சூழ்ச்சியாகும். அதிலிருந்து தமிழக மக்கள் மீண்டெழ வேண்டும் என்று பாஜக மூத்த தலைவா் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...