இந்தியாவில் வாழ்கின்ற இஸ்லாமியர்களும் இந்துக்களும் வேறுவேறு அல்லர்

இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.

மதுரையில் தனியார்விடுதி ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இல. கணேசன் தேசிய குடியுரிமை திருத்தசட்டம் குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், தேசிய குடியுரிமை திருத்தச்சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய்பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அது பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, முறையாக நாடாளுமன்றத்தில் மசோதாவாக அறிமுகப் படுத்தப்பட்டு பின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.

இச்சட்டத்திற்குக் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இவையெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலோடுதான் நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது மக்களை ஏமாற்றுவதற்காக இவர்கள் போராட்டம் என்று திசைதிருப்புவது ஏற்கத்தக்கதல்ல.இந்த சட்டத்தில் எங்கும் இஸ்லாம் என்றோ முஸ்லிம் என்றோ குறிப்பிடப் படவில்லை.

வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என மூன்று நாடுகள்தான் முக்கியமாகக் குறிப்பிட படுகின்றன. இந்தியாவில் வாழ்கின்ற இஸ்லாமியர்களும் இந்துக்களும் வேறுவேறு அல்லர். ஆகையால் இதுகுறித்து இந்திய இஸ்லாமியர்கள் அச்சம்கொள்ள தேவையில்லை.

இலங்கைத் தமிழர்களை பொறுத்தவரை அவர்கள் அனைவரும் தங்களது சொந்த தேசத்திற்கு திரும்புவதையே விரும்புகின்றனர். அவர்கள் இங்குவசதியாக வாழ்வதையும் குடியுரிமை வழங்குவதையும் நானும் வரவேற்கிறேன். ஆனால் என்னை பொறுத்த வரை இங்கு வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பவேண்டும்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குடியரசுத் தலைவரிடம் இஸ்லாமிய மாணவி ஒருவர் நடந்து கொண்ட விதம் மிகத் தவறானது. தலைவர்களின் தவறான வழிகாட்டுதலில் அவ்வாறு நடந்துகொண்டார் என்று நான் கருதுகிறேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலை போலவே இந்த முறையும் பாஜக – அதிமுக கூட்டணியோடு இணைந்து போட்டியிடுகிறது. மதுரை மாவட்டத்தில் கணிசமான தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. வேட்பாளர்களின் தகுதி, நேர்மை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் இல.கணேசன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...