பாகிஸ்தானை ராகுல் ஒரு போதும் கேள்வி கேட்கமாட்டார்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்றவாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் பலியாகினர். இந்தகொடூர தாக்குதல் நடைபெற்றதன் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது.

பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பல்வேறு தலைவர்களும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இன்று மரியாதை செலுத்தினர்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி புல்வாமா தாக்குதல் குறித்து ஒருசில கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் ‘புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நமது 40 சி.ஆர்.பி.எப் தியாகிகளை இன்று நினைவில் கொள்கிறோம். சரி இதை கேட்போம் : 1. இந்த தாக்குதலில் இருந்து அதிகம் பயனடைந்தவர் யார்? 2. தாக்குதல் தொடர்பான விசாரணையின் விளைவு என்ன? 3. தாக்குதலை அனுமதித்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பாஜக அரசில் பொறுப் பேற்றது யார்? என ராகுல் காந்தி பதிவிட்டார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்துகளுக்கு பாஜக கடும்கண்டனம் தெரிவித்தது. இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல் நரசிம்ம ராவ், ‘புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நாடுமரியாதை செலுத்தும்போது, லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமதுவின் அனுதாபியான ராகுல்காந்தி, அரசாங்கத்தை மட்டுமல்ல, பாதுகாப்பு படையினரையும் குறிவைத்து விமர்சிக்கிறார். உண்மையான குற்றவாளியான பாகிஸ்தானை ராகுல் ஒரு போதும் கேள்வி கேட்கமாட்டார். அவமானம்’ என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் முன்னாள் கேபினட் மந்திரியான (பாஜக) சையத் ஷாநவாஸ் உசேன் ‘ராகுல் காந்தி சி.ஆர்.பி.எப் வீரர்களை அவமதித்துவிட்டார். ராகுல் காந்தியின் இத்தகைய கருத்துக்கள் சர்வதேச அரங்குகளில் இந்தியாவை பாகிஸ்தான் எதிர்கொள்ள உதவுகின்றன’ என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...