நாடுதழுவிய மொழி சமஸ்கிருதம்

நாடுதழுவிய மொழி சமஸ்கிருதம். ஆனால் தமிழ்மொழியை தமிழர்கள் மட்டுமே பேசுகிறார்கள் என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் 166-வது பிறந்த நாள் விழாவை யொட்டி சென்னை மாநிலகல்லூரி வளாகத்தில் உள்ள அவரதுசிலைக்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மரியாதை செலுத்தினார்.
பின்னர், தமிழ் வளர்ச்சியை காட்டிலும் சமஸ்கிருதத்திற்கு அதிகநிதி ஒதுக்கப் பட்டிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர் சமஸ்கிருதம் நாடுதழுவிய மொழி. தமிழ் தமிழர்களால் மட்டும் பேசப்படும்மொழி எனவே தமிழை காட்டிலும் சமஸ்கிருதத்திற்கு அதிகநிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழ் வளர்ச்சிக்காக மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது எனவும் அவர் கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு நீதிமன்றத்தின் உத்தரவை மதிப்பதாகவும், போராட்டங்களை எதிர்கொள்ள தமிழகஅரசு குறிப்பாக காவல்துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதனால் மிக பெரிய அளவிலான கலவரங்கள் தடுக்கப்பட்டுள்ளது பாராட்டிற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தால் ஒருஇந்தியன்  பாதிக்கப்பட்டால் ஒருகோடி தருவேன் என நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு குடியுரிமை திருத்த சட்டத்தின் உண்மைதன்மையை எடுத்துரைப்பதாகவும், தமிழக முதல்வரும் இதை தான் நேற்று சட்டப்பேரவையில் கூறியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக பதவி ஆசைகாரணமாக பொய் குற்றச்சாட்டு கூறுபவர்களை ஆதரித்து வருகின்றனர், குடியுரிமை திருத்தசட்டத்தை கண்டு யாரும் பயப்படவேண்டாம் என்றும் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...