மோடி மிகவும் கடினமானவர்

சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் . நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது.-
5 மாதங்களுக்கு முன்பு டெக்சாஸில் உள்ள ஒருமாபெரும் கால்பந்து மைதானத்தில் அமெரிக்கா உங்கள் மாபெரும் பிரதமரை வரவேற்றது, இன்று இந்தியா அகமதா பாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் எங்களை வரவேற்கிறது.
இந்த விருந் தோம்பலை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம். இந்தியா நம் இதயத்தில் ஒருசிறப்பு இடத்தை பிடிக்கும்.இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நட்புநாடாக அமெரிக்க திகழும்

கலாச்சாரம், வாழ்வியல், பொருளாதாரத்தில் இந்தியா இணைந்து செயல் படுகிறது. இந்தியாவின் சாம்பியன், ஒப்பற்றதலைவர் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. இந்தியாமீது எப்போதும் எங்களுக்கு காதல் உண்டு.

பாலிவுட் படங்கள், பங்க்ரா மற்றும் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே மற்றும் ஷோலே போன்ற கிளாசிக் படங்களை பார்த்து உலகமெங்கும் உள்ள மக்கள் மிகுந்தமகிழ்ச்சி அடைகிறார்கள்.சச்சின் தெண்டுல்கர், விராட்கோலி போன்ற சிறந்த கிரிக்கெட் வீரர்களை நீங்கள் உற்சாகப் படுத்துகிறீர்கள்.விவேகானந்தர் போன்ற ஞானிகள் பலநல்ல தத்துவங்களை வழங்கி சென்றுள்ளனர்.

எங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து கட்டியெழுப்பும் போது, இந்தியாவுக்கு இந்த உலகத்தில் மிகச்சிறந்த மற்றும் மிகவும் அச்சமுள்ள சில இராணுவ உபகரணங்களை வழங்க அமெரிக்கா தயாராகஉள்ளது.

தெற்காசியாவில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமெரிக்கா தயாராக உள்ளது. அமெரிக்காவில் வேலை வாய்ப்பின்மை குறைந்துள்ளது.

இதுவரை மிக பெரிய ஆயுதங்களை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். நாங்கள் சிறந்ததைச் செய்கிறோம், இப்போது நாங்கள் இந்தியாவுடன் அதனை கையாள்கிறோம்.இந்தியாவின் பாதுகாப் பிற்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம்.

பாதுகாப்பு துறையில் நாளை எங்கள் பிரதிநிதிகள் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சிஅடைகிறேன். இந்தியாவுடன் நாளை 20 ஆயிரம்கோடி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

டைகர் டிரயல்’ என்ற பெயரில், இரு நாடுகளின் ராணுவ கூட்டுப்பயிற்சி நடைபெறும். ஏவுகணைகள், ராக்கெட்டுகள், கப்பல்கட்டுவதில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிப்போம். விண்வெளி திட்டங்களிலும் அமெரிக்கா ஒத்துழைப்புடன் செயல்படும்.

எல்லைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உண்டு. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்க இணைந்து செயல்படும். இஸ்லாமிய பயங்கரவாத ஐ.எஸ் அமைப்பை அமெரிக்கா ஒடுக்கி உள்ளது. தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு இந்தியா நல்ல தலைமையை கொண்டுள்ளது.பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் முனைப்பு காட்டி வருகிறேன் .

பிரதமர் மோடி ‘டீ வாலா ‘ என்று தொடங்கினார்,  அவர் தேநீர் விற்பனை யாளராக பணியாற்றினார். எல்லோரும் அவரை நேசிக் கிறார்கள், ஆனால் இதை நான் உங்களுக்கு சொல்வேன், அவர் மிகவும் கடினமானவர்.அன்று டீவிற்றவர், இன்று நாட்டின் பிரதமர் .
பிரதமர் மோடி நீங்கள் குஜராத்தின் பெருமைமட்டும் அல்ல, கடின உழைப்பு மற்றும் பக்தியால், இந்தியர்கள் எதையும், எதை வேண்டுமானாலும் சாதிக்கமுடியும் என்பதற்கு நீங்கள் ஒருஉதாரணமாக வாழ்கிறீர்கள். பிரதமர் நம்பமுடியாத எழுச்சியின் நகரும்கதை ஆகும். இந்தியாவிற்காக பிரதமர் மோடி இரவும் பகலும் உழைக்கிறார்.
இணையதளம், சமையல் எரிவாயு இணைப்பை நாடுமுழுவதும் கொண்டு சேர்த்துள்ளார் பிரதமர் மோடி என கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...