பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்

“கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது,” என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ் சாட்டியுள்ளார்.

வட அமெரிக்க நாடான கனடாவில் கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக, அந்நாட்டுபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை மத்தியஅரசு திட்டவட்டமாக மறுத்தது.

இதனால், இந்தியா – கனடா உறவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:

கனடா அரசுடன் சிலஆண்டுகளாக தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டுவருகிறது. பயங்கரவாதம் மற்றும் வன்முறை தொடர்பாகவே இந்தபிரச்னைகள் சுழல்கின்றன.

இந்தியா ஓர் ஜனநாயக நாடு. பேச்சுசுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

கருத்து சுதந்திரம் வன்முறையை துாண்டும் விதமாக இருக்கக்கூடாது. பேச்சு சுதந்திரத்தை, வன்முறை தவறாக வழி நடத்துகிறது. கனடாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் இந்திய துாதரகம் தாக்குதலுக்கு உள்ளானது. கனடாவின் குற்றச்சாட்டை நாங்கள் கண்டுகொள்ளாமல் இல்லை.

எதையும் பார்க்க மாட்டோம் என்று கதவுகளை மூடிக் கொண்டும் இல்லை. நிஜ்ஜாரின் மரணம் தொடர்பான கருத்து வேறுபாடுகளை கனடா பேசி தீர்க்கவேண்டும்.

கொலை விவகாரத்தில் முக்கிய தகவல்களை கனடாபகிர்ந்தால், அதை விசாரிக்க தயார். எதிர் தரப்பில் என்று ஆதாரமாகக் காட்ட தெளிவாக ஏதேனும் இருந்தால் அதை நாங்கள் பரிசீலிக்கதயாராகவே இருக்கிறோம்.

அதேபோல், இந்தியா சார்பில் சில தனிநபர்களை நாடு கடத்தும்படி கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அவற்றை கனடா கண்டுகொள்ளவே இல்லை. அந்தநபர்கள், அமைப்புகள் இந்தியாவுக்கு எதிரான வன்முறையைத் துாண்டும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டனர் என்பது தெரிந்ததுமே, அதற்கு ஒத்துழைக்கவில்லை.

இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு நடந்தது போல், வேறு எந்த நாட்டுக்காவது நடந்திருந்தால், அதை அவர்கள் எப்படி கையாண்டிருப்பர் என்ற கேள்வியும் எழுகிறது.

கனடாவில் உள்ள துாதரகம் மற்றும் துணைதுாதரகம் செல்லும் இந்திய துாதர்கள் பகிரங்கமாக மிரட்டப்படுகின்றனர். இதனால், அங்கு விசாநடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கனடா பிரச்னை பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்சல்லிவன் ஆகியோருடன் பேசியிருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...