சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனாவைரஸ் தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கிவருகிறது. கொரோனா தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகெங்கிலும் 1 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாஜக. எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் தங்கள்தொகுதிகளுக்கு சென்று கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
தலை நகர் டெல்லியில் பா.ஜ.க.வின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின்கட்காரி மற்றும் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்பட பலர் பங்கேற்றனர்.இந்தகூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பா.ஜ.க. எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளுக்குசென்று மக்களிடம் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், விமான நிலையங்கள், துறைமுகங்களில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு தன்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்த பிரதமர் மோடி, கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஊடகங்களின் பணியையும் பாராட்டினார்.