ராஜஸ்தான் பொக்ரானில் இன்று ‘பாரத் ஷக்தி’ என்ற உள்நாட்டில் தயாரிக்க ப்பட்ட ராணுவ ஆயுதங்கள் காட்சிப் படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து முப்படைகளின் ஒத்திகை பயிற்சியும் நடத்தப்பட்டது. சுமார் 50 நிமிடங்கள் இந்தப்பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சியில் கடற்படை ஏவுகணைகள், விமானப் படை தேஜஸ் இலகுரக போர்விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள், டேங்கர்கள் உள்பட பல்வேறு ராணுவ உபகரணங்கள் காட்சிப் படுத்தப்பட்டன.
துல்லியமான வழிகாட்டும் ஏவுகணை, தகவல்தொழில்நுட்ப அமைப்பு, தானியங்கி ஸ்பெக்ட்ரம் கண்காணிப்பு அமைப்பு போன்ற புது தொழில் நுட்பங்களும் பரிசோதிக்கப் பட்டன.
இந்நிலையில், இந்தஒத்திகை பயிற்சியை பிரதமர் நரேந்திரமோடி நேரில் சென்று பார்வை யிட்டார். பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே ஆகியோரும் பார்வை யிட்டனர். மேலும், 40 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் பார்வையிட்டனர்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |