மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நாடாளுமன்ற கட்சிகளின் கட்சிக்கூட்டத்தில் திமுகவும் பங்கேற்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொலைபேசியில் இன்று ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேசினார்.
தயாளு அம்மையாரின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடியிடம் அவரது நலன்குறித்து ஸ்டாலின் கேட்டார். அப்போது, ஏப்ரல் 8 ஆம் தேதிநடைபெறும் நாடாளுமன்ற கட்சிகளின் கூட்டத்தில் திமுக சார்பில் டிஆர்.பாலு பங்கேற்பார் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் மத்தியஅரசு ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கைக்கும் அரணாக இருக்கவேண்டும். நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய அரசுக்கு ஆக்கப் பூர்வ ஆலோசனையை திமுக தரும் எனவும் பிரதமர் மோடியிடம் முக.ஸ்டாலின் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஸ்டாலினை தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவா்களுடன் பிரதமா் நரேந்திரமோடி வரும் 8-ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாட இருக்கிறாா்.
இந்தக்கூட்டத்தில் திமுக சார்பில் டிஆர்.பாலு பங்கேற்பார் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |