சாதாரண துணியினால் ஆன மாஸ்க்-ஐ அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மோடி

பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ம் தேதியுடன் முடிவுக்குவருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு சிலமாநில அரசுகள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே, ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கும் என்று அறிவித்துள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காணொளிகாட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருவது பற்றியும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர்களுடன் ஆலோசித்தார்.

வருகிற 14-ம் தேதி முதல் ஒட்டுமொத்தமாக ஊரடங்கை நீக்கிவிட முடியாது என பிரதமர் மோடி ஏற்கனவே கூறி இருப்பதால், ஒருசில பகுதிகளில் அல்லது குறிப்பிட்ட சிலமணி நேரம் ஊரடங்கு நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

இதற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களில் மாஸ்க் எதுவும் அணியாமல் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், இம்முறை அவர் மாஸ்க் அணிந்துள்ளார். உத்தவ்தாக்கரே உள்ளிட்ட சில மாநில முதல்வர்களும் மாஸ்க் அணிந்திருந்தனர்.

எனினும், பிரதமர் மோடி சாதாரண துணியினால் ஆன மாஸ்க்-ஐயே அணிந்திருந்தார். சிலநாட்களுக்கு முன்னர், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், வீட்டில் கிடைக்கும் துணிகளைக் கொண்டு மாஸ்க்தயாரித்து மக்கள் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இதனை அடுத்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள், வீட்டிலேயே மாஸ்க் தயாரிக்கும் புகைப் படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டனர்.

எனினும், N 95 மற்றும் மருத்துவ மாஸ்க்களுக்கு அதிகதட்டுப்பாடு நிலவுகிறது. இதனை மறைக்கவே, பிரதமர் இப்படி ஒருவேண்டுகோளை விடுக்கிறார் என்று எதிர்க் கட்சிகள் தரப்பில் விமர்சிக் கப்பட்டது.

மக்களிடம் தான் விடுத்த கோரிக்கைக்கு எடுத்துக்காட்டாக பிரதமர் மோடி, இன்றைய கூட்டத்தில் சாதாரண துணியினால் ஆன மாஸ்க்-ஐ அணிந்து கலந்துகொண்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...