யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்தசிங் பிஸ்ட் திங்கட்கிழமை (20-4-2020) காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

71 வயதான ஆனந்தசிங் சிறுநீரக கோளாறுகளுக்கு சிகிச்சைபெற எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒருமாதத்திற்கு முன் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

ஆனந்த் சிங் பிஸ்டின் உடல் உத்தரகாண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்திலுள்ள அவரது சொந்தகிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் கரோனா வைரஸ்தொற்று பரவுவதை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் ஒன்றில் இன்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரிடம் அவரது தந்தை ஆனந்த்சிங் மறைந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. தந்தை இறந்தசெய்தி கிடைத்தும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தாமல் முதலமைச்சர் யோகி ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து நடத்திமுடித்தார்.

அதன்பிறகுதான் தன்னுடைய தந்தை மறைவுக்கு குறித்து தன்னுடைய துக்கத்தை தெரிவித்தார்.

என்னுடைய தந்தையின் இறுதிநேரத்தில் அவர்கூட இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அதுமுடியாமல் போய்விட்டது என் தந்தையின் மறைவு எனக்கு பெரிதும் வருத்தமளிக்கிறது. அவர் எனக்கு எப்பொழுதும் இறைவனிடம் மாறாத விசுவாசத்துடன் இருக்க கற்றுக்கொடுத்தார். தன்னலமற்ற கடினமான உழைப்பு எப்பொழுதும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

அவரது இறுதிநேரத்தில் கூட அவருடன் என்னால் இருக்க முடியாமல் போனது. உத்தரப் பிரதேசத்தின் 23 கோடி மக்களை காக்கவேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால் அவருடைய இறுதிச்சடங்கில் கூட நான் நாளை கலந்துகொள்ள முடியாது. முழு ஊரடங்கு காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு நான் செல்வதற்கும் வாய்ப்பில்லை.

முழு ஊரடங்கு முடிந்த பிறகு நான் அங்குசென்று எனது அம்மாவையும் உறவினர்களையும் சந்தித்து பேசுவேன். இப்பொழுது ஊரடங்கு உத்தரவை மீறாமல் என்னுடைய அம்மாவும் உறவினர்களும் நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என யோகி ஆதித்ய நாத் தெரிவித்தார்

முதலமைச்சரின் தந்தை ஆனந்தசிங் பிஸ்ட் மறைந்ததுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் .உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...