ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலமா ?

வானியலும் ஜோதிடத்திலும் ஒன்பது கிரகங்களுக்கும் 27 நட்சத்திரங்கள் பிரிக்கப்பட்டிருப்பதை காண்கிறோம். 27 நட்சத்திரங்களும் பல்வேறு குணாதியங்களைக் கொண்டது .

ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்பது பழைய பழமொழி. ஆண்கள் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் அரசாட்சி

செய்வார்கள் என்றும், பெண்கள் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் நிர்மூலம் என்றும் தொன்று ொட்டு இருந்து வருகிறது.

இது எந்த அளவுக்கு உண்மை! ஆஞ்சநேயரின் பிறந்த நட்சத்திரம் மூலம்! எனவே ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் ஆஞ்சநேயரைப்போல நல்ல உடல் வலிமை, மனோ வலிமைப் பெற்றவர்களாக இருப்பார்கள் என்பது ஒரு சாரார் கருத்து.

மூலம் நட்சத்திரத்தை_பொறுத்தவரை “ஆனி மூலம் அரசாளும்” பின் மூலம்_நிர்மூலம என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆனி மாததத்தில் மூல நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் அரசு மற்றும் அரசு ொடர்பானவர்களுக்கு நெருக்கமாக_ இருப்பார்கள்; மூலம் நான்காம் பாதத்தில் (பின் மூலம்) பிறப்பவர்கள் எதிரிகளை நிர்மூலமா க்குவார்கள் என்பதே அதன்பொருள்.
மேலும் இதற்க்கு வேறு ஒரு விளக்கத்தையும் தருகிறார்கள் , அதாவது மூலம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. இவருக்கு ஞானக்காரகன் என்ற பெயரும் உண்டு. மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் நுட்பமான அறிவுத் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். நுனிப்புல் மேய்வதுபோல எந்த முடிவும், மேலெழுந்தவாரியாக, எடுக்க மாட்டார்கள். நன்கு தீர்க்கமாக சிந்தித்து முன்யோசனையுடன் செயல்படக் கூடியவர்களாக இருப்பர்.

ஒரு குடும்பத்தின் தலைவர் மாமனார் என்ற நிலையில், அந்தக் குடும்பத்திற்கு மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மருமகளாக வர நேர்ந்தால், அம்மருமகள் மாமனாருக்கு மேல் சிந்தித்து செயல்படுவாராம். அப்போது மாமனாருக்கும், மருமகளுக்கும் தன் முனைப்பு மற்றும் தாழ்வு மனப்பான்மை வந்து விடுமாம். தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு விடுமாம். இதைத் தவிர்க்கவே நமது முன்னோர்கள் சில காரண காரியங்களை பழமொழிகளாகவும், தெய்வ வாக்கு என்கிற பெயரிலும் சொல்லி வைத்தார்கள் என்று கூறுபவர்களும் உண்டு .

உண்மையில் ஆண் மூலம் அரசாளும் என்றால் மூலம் நட்சத்திரத்தில்
பிறந்த ஆண்கள் எல்லாம் அரசு ஆள்கிறார்களா என்ன! அதேபோல பெண் மூலம் நிர்மூலம் என்கின்றனர், ஆனால் மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் எத்தனையோ பேர் சாதனையாளராகவும், புகுந்த வீட்டில் பெருமை மிக்க வாழ்க்கை நடத்துவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்! அன்பர்களே! உண்மையை உணர்ந்து செயல் படுவோம்.!

ஆண் மூலம், அரசாளும், பெண் மூலம், நிர்மூலமா ,  ஆண் மூலம் பெண் மூலம் , மூல நட்சத்திரத்தில், பிறந்தால் , அரசாட்சி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...