எந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இருக்காது

இரண்டாவது முறையாக 2019ஆம் ஆண்டு வெற்றி பெற்று பிரதமராக நரேந்திர மோடி பேசியது; மக்களவைத் தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக அமோக வெற்றிபெற்றதன் மூலம் , “இந்தியாவுக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது” எனது வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், என் உடலில் ஒவ்வொரு அங்கத்தையும் இந்நாட்டு மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கிறேன்.

மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதும், மக்கள் அனைவரும் மோடி, மோடி என்று முழக்கமிடுகிறார்கள். இது, எனக்குகிடைத்த வெற்றி அல்ல. நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு கிடைத்தவெற்றி. மக்களின் எதிர்பார்ப்புக்கும், நம்பிக்கைக்கும் கிடைத்தவெற்றி. 21-ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை அனைத்து பாஜக எம்.பி.க்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்களும் பணிவுடன் மக்களுக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

இந்த தேர்தலில் பாரத தாய்க்கு பெருமைசேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் பாடுபட்டுள்ளனர்.  மக்களவைத் தேர்தலில் பாஜக அபாரமாக வெற்றி பெற்றிருப்பதைக் கண்டு அரசியல் பண்டிதர்கள் தங்களுடைய சிந்தனையை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.

நாட்டின் இப்போது இரண்டு ஜாதிகள்தான் உள்ளன. ஒன்று ஏழைஜாதி. மற்றொன்று, ஏழ்மை நிலையை அழிக்க விரும்பும் ஜாதி.

நாட்டின் எதிர்காலத்தை என் கைகளில் ஒப்படைத்திருக்கிறீர்கள். எனக்கு மிகப்பெரிய பொறுப்பை அளித்திருக்கிறீர்கள். எந்தவொரு காரியத்தையும் எனது சுயநலத்துக்காக செய்யமாட்டேன். பணிகளைச் செய்யும்போது அதில் சில தவறுகள் நேரிடலாம். ஆனால், தீய நோக்கத்துடன் எந்தவொரு காரியத்தையும் நான் செய்யமாட்டேன். என் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், எனது உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

ஒருகாலத்தில் பாஜகவுக்கு 2 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இருந்தாலும், நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. எங்கள் கொள்கைகளை மறந்துவிடவில்லை; எங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுத்ததும் இல்லை. சோர்வடைந்து பாதியில் நின்றுவிடவுமில்லை. 2 எம்.பி.க்களை மட்டுமேபெற்றிருந்த பாஜக, பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அதிக அளவில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்திருப்பது இதுவே முதல்முறை. அதுவும் 40-42 டிகிரி வெயிலில். இதற்காக, 130 கோடி மக்களுக்கும் தலை வணங்க கடமைப்பட்டுள்ளேன். இதுவரை இல்லாத அளவில் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்காக, இந்திய ஜனநாயகத்தின் வலிமையை உலகம் அங்கீகரிக்க வேண்டும்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...