தனித்து போட்டியிட்டாலும் 25 தொகுதிகளில் வெற்றி இலக்கு

தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் காலுன்றி உள்ள பாஜகவை எப்படி அடுத்த நிலைக்கு கொண்டுசெல்வது, 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டதாக தெரிகிறது.

அப்போது, திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல்நேரத்தில் மட்டும்தான் மக்களிடம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. ஆனால், பாஜக அப்படிப்பட்ட கட்சிஅல்ல; கட்சியினர் அன்றாடம் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏழை, எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மத்தியஅரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் நிதிபங்களிப்புடன் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் பற்றியும் கட்சிநிர்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேணடும்’ என்று அண்ணாமலை அட்வைஸ் கொடுத்துள்ளார்.

அத்துடன் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், தமிழகத்தை சேர்ந்தவர்களின் சிறப்பானசேவை குறித்து தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார். இந்நிகழ்ச்சியை தமிழகமக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கட்சியினரை அறிவுறுத்திஉள்ளார்.

முக்கியமாக, 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், மாநிலத்தின் அனைத்துபகுதிகளிலும் கட்சியை பலப்படுத்தும் பணியை புதிய நிர்வாகிகள், முழுமூச்சாக மேற்கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சம் 25 அல்லது அதற்கு அதிகநபர்களை உறுப்பினர்களாக சேர்ப்பவர்களுக்கு கட்சிவிதிப்படி பொறுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். .ஒவ்வொரு தொண்டரும் தங்கள்பகுதியில் குறைந்தபட்சம் 25 நபர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும். அவர்களுக்கு தேவையான அரசு உதவிகளை செய்து தக வேண்டும்.

எதிர்வரும் எம்பி தேர்தலில் கூட்டணிகுறித்தி தேசிய தலைமை முடிவுசெய்யும். அதேசமயம் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டாலும் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் இப்போதில் இருந்தே களப்பணிகளில் இறங்கவேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை இலக்கு நிர்ணயித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...