தனித்து போட்டியிட்டாலும் 25 தொகுதிகளில் வெற்றி இலக்கு

தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் காலுன்றி உள்ள பாஜகவை எப்படி அடுத்த நிலைக்கு கொண்டுசெல்வது, 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டதாக தெரிகிறது.

அப்போது, திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல்நேரத்தில் மட்டும்தான் மக்களிடம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. ஆனால், பாஜக அப்படிப்பட்ட கட்சிஅல்ல; கட்சியினர் அன்றாடம் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏழை, எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மத்தியஅரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் நிதிபங்களிப்புடன் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் பற்றியும் கட்சிநிர்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேணடும்’ என்று அண்ணாமலை அட்வைஸ் கொடுத்துள்ளார்.

அத்துடன் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், தமிழகத்தை சேர்ந்தவர்களின் சிறப்பானசேவை குறித்து தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார். இந்நிகழ்ச்சியை தமிழகமக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கட்சியினரை அறிவுறுத்திஉள்ளார்.

முக்கியமாக, 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், மாநிலத்தின் அனைத்துபகுதிகளிலும் கட்சியை பலப்படுத்தும் பணியை புதிய நிர்வாகிகள், முழுமூச்சாக மேற்கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சம் 25 அல்லது அதற்கு அதிகநபர்களை உறுப்பினர்களாக சேர்ப்பவர்களுக்கு கட்சிவிதிப்படி பொறுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். .ஒவ்வொரு தொண்டரும் தங்கள்பகுதியில் குறைந்தபட்சம் 25 நபர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும். அவர்களுக்கு தேவையான அரசு உதவிகளை செய்து தக வேண்டும்.

எதிர்வரும் எம்பி தேர்தலில் கூட்டணிகுறித்தி தேசிய தலைமை முடிவுசெய்யும். அதேசமயம் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டாலும் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் இப்போதில் இருந்தே களப்பணிகளில் இறங்கவேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை இலக்கு நிர்ணயித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...