தனித்து போட்டியிட்டாலும் 25 தொகுதிகளில் வெற்றி இலக்கு

தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் காலுன்றி உள்ள பாஜகவை எப்படி அடுத்த நிலைக்கு கொண்டுசெல்வது, 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டதாக தெரிகிறது.

அப்போது, திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல்நேரத்தில் மட்டும்தான் மக்களிடம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. ஆனால், பாஜக அப்படிப்பட்ட கட்சிஅல்ல; கட்சியினர் அன்றாடம் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏழை, எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மத்தியஅரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் நிதிபங்களிப்புடன் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் பற்றியும் கட்சிநிர்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேணடும்’ என்று அண்ணாமலை அட்வைஸ் கொடுத்துள்ளார்.

அத்துடன் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், தமிழகத்தை சேர்ந்தவர்களின் சிறப்பானசேவை குறித்து தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார். இந்நிகழ்ச்சியை தமிழகமக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கட்சியினரை அறிவுறுத்திஉள்ளார்.

முக்கியமாக, 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், மாநிலத்தின் அனைத்துபகுதிகளிலும் கட்சியை பலப்படுத்தும் பணியை புதிய நிர்வாகிகள், முழுமூச்சாக மேற்கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சம் 25 அல்லது அதற்கு அதிகநபர்களை உறுப்பினர்களாக சேர்ப்பவர்களுக்கு கட்சிவிதிப்படி பொறுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். .ஒவ்வொரு தொண்டரும் தங்கள்பகுதியில் குறைந்தபட்சம் 25 நபர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும். அவர்களுக்கு தேவையான அரசு உதவிகளை செய்து தக வேண்டும்.

எதிர்வரும் எம்பி தேர்தலில் கூட்டணிகுறித்தி தேசிய தலைமை முடிவுசெய்யும். அதேசமயம் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டாலும் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் இப்போதில் இருந்தே களப்பணிகளில் இறங்கவேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை இலக்கு நிர்ணயித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...