சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எல்லை பகுதியில் சமீபத்தில் சண்டை ஏற்பட்டபோதிலும், சீனாவுடன் தூதரக மட்டத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அர்னாப் கோ-ஸ்வாமியுடன் நேர்காணலில் கலந்துகொண்ட அமித்ஷா, இந்தியாவின் இறையாண்மையும் பாதுகாப்பும் மற்ற அனைத்தையும்விட முதன்மையானது என உறுதிபட தெரிவித்தார். அண்மையில் புல்வாமாவில் கார் வெடிகுண்டு முயற்சி சம்பவம் முறியடிக்கப்பட்டதை குறித்து எதிர்கட்சியான காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், இந்திய அரசமைப்பு சட்டம் 370, காஷ்மீரில் இளைஞர்கள் தீவிரவாதத்தில் ஈடுபட மிகப்பெரிய காரணம் எனவும், தீவிரவாதம் அதிகரித்ததற்கு காங்கிரஸ் தான் காரணம் எனவும் குற்றம்சாட்டினார்.
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |