டிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்

பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலை பேசியில் தொடர்பு கொண்டு ‘முக்கியமான ஆலோசனைகளை’ நடத்தியுள்ளார்.

இந்திய நேரப்படி நேற்றுஇரவு நரேந்திர மோடியை டிரம்ப் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது அடுத்து அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட மேலும் சிலமுக்கிய நாடுகளை ஜி7 கூட்டமைப்பில் இணைத்து கொள்வதற்கு தயாராக இருப்பதாக டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் இந்த தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பதிவில் கூறியுள்ள தகவல்கள்,

அமெரிக்க அதிபரும் எனது நண்பருமான டிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன். ஜி7 உச்சிமாநாடு தொடர்பாகவும் கொரோனா பெருந்தொற்று தொடர்பாகவும் மற்றும் பல்வேறுவிஷயங்கள் பற்றியும் அப்போது நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.

செழுமை மற்றும் ஆழம்கொண்ட இந்திய அமெரிக்க நட்புறவு என்பது கொரோனா வைரஸ் காலகட்டத்திற்கு பிறகான உலக கட்டமைப்பின் போது முக்கியமானதாக மாறும். இவ்வாறு நரேந்திர மோடி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் சீனா அதிகப்படியான படைகளை குவித்துவருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டிய நிலையில் டிரம்ப் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மோடியும் தனது டுவிட்டர்பதிவில் ஜி7 மாநாடு மட்டுமல்லாது மேலும் பல விஷயங்களை பேசியதாக கூறியுள்ள கருத்து வெளியுறவு நிபுணர்களால் கூர்ந்து நோக்கப்படுகிறது.

இந்த உரையாடலும் மோடியின் டுவிட்டர் பதிவும் சீனாவுக்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...