கொரோனா விவகாரத்தில் எதிர் கட்சித் தலைவர் அரசியல் செய்யாமல் அரசுக்கு முழுஒத்துழைப்பு வழங்கவேண்டும் என பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர், மத்திய அரசு சார்பில், தமிழக விவசாயிகள் 32 லட்சம்பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிதிவழங்கி உள்ளதாக கூறினார்.
சிறப்பாக செயல்பட்டுவரும் தமிழக அரசுக்கு, எதிர் கட்சித் தலைவர் ஸ்டாலின், ஒத்துழைக்க வேண்டும் என்றார். பிரதமர் மோடியின் சிறப்பான செயல் பாட்டால், உலக நாடுகளைவிட இந்தியாவில் கொரோனாபரவல் குறைவு என்றும் முருகன் கூறினார்.