காவல் துறை நடந்துகொண்ட விதம் தவறானது

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல் துறை நடந்துகொண்ட விதம் தவறானது. காவல் துறையின் அத்துமீறல் கண்டிக்கத் தக்கது. காவல்துறையினரால் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் ஏற்படக் கூடாது என பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்காசியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்குவந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் கடந்த 5 ஆண்டு ஆட்சியிலும், கடந்த ஓராண்டிலும் பாஜக அரசு மகத்தான சாதனைகளை செய்துள்ளது. கரோனா தொற்றால் உலகநாடுகளில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. உலக நாடுகள் போற்றும்வகையில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பெருமைசேர்க்கும் நல்ல திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துள்ளார்.

எல்லா மாநிலங்களிலும் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகட்டும் திட்டம், 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், 9 கோடிபேருக்கு மேல் இலவக காஸ்இணைப்பு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. கரோனா காலத்தில் மட்டும் 9 ஆயிரம் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. பல ரயில்கள் கரோனா சிகிச்சைக்காக படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன.

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல் துறை நடந்துகொண்ட விதம் தவறானது. காவல் துறையின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. காவல் துறையினரால் இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் ஏற்பட கூடாது.

கரோனா ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மற்றமாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது.

அரசாங்கமே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது சரியானதல்ல. பொதுமக்களும் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...