காவல் துறை நடந்துகொண்ட விதம் தவறானது

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல் துறை நடந்துகொண்ட விதம் தவறானது. காவல் துறையின் அத்துமீறல் கண்டிக்கத் தக்கது. காவல்துறையினரால் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் ஏற்படக் கூடாது என பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்காசியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்குவந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் கடந்த 5 ஆண்டு ஆட்சியிலும், கடந்த ஓராண்டிலும் பாஜக அரசு மகத்தான சாதனைகளை செய்துள்ளது. கரோனா தொற்றால் உலகநாடுகளில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. உலக நாடுகள் போற்றும்வகையில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பெருமைசேர்க்கும் நல்ல திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துள்ளார்.

எல்லா மாநிலங்களிலும் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகட்டும் திட்டம், 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், 9 கோடிபேருக்கு மேல் இலவக காஸ்இணைப்பு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. கரோனா காலத்தில் மட்டும் 9 ஆயிரம் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. பல ரயில்கள் கரோனா சிகிச்சைக்காக படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன.

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல் துறை நடந்துகொண்ட விதம் தவறானது. காவல் துறையின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. காவல் துறையினரால் இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் ஏற்பட கூடாது.

கரோனா ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மற்றமாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது.

அரசாங்கமே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது சரியானதல்ல. பொதுமக்களும் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...