60 கோடிக்கும் அதிகமானோர் திறந்தவெளியில் மலம் கழிப்பதை கைவிட்டுள்ளனர்

மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சியைபிடித்தது. பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அதேஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்தநாளில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன் 9-வது ஆண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திரவுபதிமுர்மு பேசியதாவது: தூய்மை இந்தியா (கிராமப் புறம்) திட்டம் பழக்கவழக்கத்தை மாற்றும் இயக்கமாக திகழ்கிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 11 கோடி கழிவறைகள் கட்டப் பட்டுள்ளன. இதனால் 60 கோடிக்கும் மேற்பட்டோர் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளனர். ஐ.நா.சபையின் நீடித்தவளர்ச்சி இலக்கின் 6-வது பிரிவு அனைவருக்கும் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரவசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்த இலக்கை 2030-க்குள் எட்ட காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ள போதிலும் இந்தியா முன்கூட்டியே எட்டிவிட்டது.

தூய்மைஇந்தியா திட்டத்தின் 2-வது கட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதன்படி நாட்டில் உள்ள அனைத்து 6 லட்சம் கிராமங்களிலும் 100% கழிவறைகளை கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1.16 லட்சம் கிராமமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதில் இருந்து 100% விடுபட்டுள்ளனர். நாட்டில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் 2024-க்குள் குழாய்மூலம் சுத்தமான குடிநீர் வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக 2019-ல் ஜல்ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது 3.23 கோடி குடியிருப்புகளுக்கு மட்டுமே குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 10.27 கோடியாக அதிகரித்துள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில், கழிவறைகள், கைகளை சோப்பு போட்டு கழுவுதல், குழாய்மூலம் குடிநீர் விநியோகம் ஆகியவை நோய் பரவுவதை தடுக்க பெரிதும் உதவியதை அனைவரும் உணர்ந்தனர். இவ் வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...