காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் தேசப்பற்று போலியானது என்று பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோட்டில் பாஜக மாவட்ட அலுவலகத் திறப்புவிழா ஞாயிறன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ராகுல்காந்தியை விமர்சித்துப் பேசியதாவது:
இந்தியா மற்றும் சீனா இடையே டோக்லாம் எல்லைப்பிரச்சினை நடந்து கொண்டிருந்த சமயத்தில் ராகுல் காந்தி இந்தியாவிற்கான சீனத் தூதரை சந்தித்தது நாட்டிற்கே தெரியும். அதிலும் அதனை வெளியே கூறாமல் ராகுல் தேசத்தை தவறாக வழிநடத்தினார். சீனத்தூதர் ராகுலுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்த பிறகே அது அனைவருக்கும் தெரியவந்தது. எனவே தேசத்தின் மீதான உங்கள் காதல் என்பது போலியானது. பாதுகாப்புத் துறை தொடர்பான 11 கூட்டங்களை நீங்கள் புறக்கணித் துள்ளீர்கள். இதுதான் ஒரு நாட்டை நடத்தும் முறையா?
இவ்வாறு பேசியவர் தேசத்தை வலுப்படுத்துவதற்காக பாஜகவில் இணையும்படி மற்ற கட்சிகளின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |