கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காங்கிரஸ் மௌனம் காப்பது ஏன்?கார்கேவுக்கு நட்டா கடிதம்

“ஆளும் தி.மு.க-இந்திய கூட்டணி ஆட்சிக்கும், சட்டவிரோத மதுபான மாஃபியாவுக்கும் இடையேயான தொடர்பு இல்லாமலிருந்திருந்தால், பலியான உயிர்களை இன்று காப்பாற்றியிருக்கலாம்.” – நட்டா

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு 50-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நான்கு நாள்களாக பெரும் விவாதப்பொருளாகவும், தி.மு.க ஆட்சி நிர்வாகத்தின்மீது கேள்வியெழுப்பக்கூடியதாகவும் இருக்கிறது. தற்போதுவரை பலிஎண்ணிக்கை 57-ஆக உயர்ந்திருக்கிறது. இதில், தி.மு.க அரசை விமர்சித்துவரும் எதிர்க்கட்சிகள், குற்றவாளிகளைக் கைதுசெய்து அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திவருகிறது.

அந்த கடிதத்தில், “கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம் முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. ஒருவேளை ஆளும் தி.மு.க-இந்தியகூட்டணி ஆட்சிக்கும், சட்டவிரோத மதுபான மாஃபியாவுக்கும் இடையேயான தொடர்பு இல்லாமலிருந்திருந்தால், பலியான உயிர்களை இன்று காப்பாற்றியிருக்கலாம். இது தொடர்பான ஊடக மற்றும் விசாரணை அறிக்கைகள், இந்த சட்டவிரோத மதுபானவணிகம் எவ்வாறு தண்டனையின்றி, திறந்த வெளியிலும், பகல் நேரத்திலும், வெளிப்படையாக அரசு மற்றும் காவல்துறையின் அனுசரணையுடன் எவ்வாறு செயல்பட்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

இவ்வளவு நடந்தபிறகும் உங்கள் (கார்கே) தலைமையிலான காங்கிரஸ் இதில் மௌனம் சாதிப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நேரத்தில், பாஜக உட்பட ஒட்டுமொத்த நாடும், தி.மு.க-இந்தியா கூட்டணியின் தமிழ்நாடு அரசை சிபிஐ விசாரணைக்கு கொண்டு செல்ல அழுத்தம் தரவும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதை உறுதி செய்யவும் உங்களை வலியுறுத்துகிறது.

மேலும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க அல்லது குறைந்தபட்சம் இதில் அவர்களை குரல்கொடுக்கவாவது சொல்லுங்கள். அதோடு, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு முன், அரசின் இந்த பேரழிவுக்கு எதிராகக் கருப்பு பட்டை போராட்டத்தில் எங்கள் தலைவர்களுடன் கலந்துகொள்ள உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று நட்டா தெரிவித்திருக்கிறார்.

Also Read

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் என்கவுன்டர்களை கு ...

தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும் L. முருகன் கருத்து 'தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலை ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாதனை ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் கு ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு '' ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...