பிரதமரின் கருத்துகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலக பொதுமறையாம் திருக்குறள் நீதிநூல் மட்டுமின்றி, வாழ்வியல் நூலாகவும் திகழ்கிறது. இனம், மொழி, நாடுபோன்ற எல்லைகளை கடந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்வை நெறிப் படுத்தும் உயரிய நூலாகும். உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் தெய்வப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் ஒன்றாகும். இத்தகைய சிறப்புமிக்க திருக்குறளை இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் படித்து பயன் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது தமிழுக்கும், தமிழருக்கும் பெருமைசேர்ப்பதாகும்’’ என தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு நன்றிதெரிவித்து தமிழக துணை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப் பதாவது:
திருவள்ளுவ பெருமானின் பெருமையை புகழ்ந்துரைத்தும் வள்ளுவநெறியில் இந்தவையகம் வாழ்வுபெற வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருப்பதை கண்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.
ஒப்பில்லா கருத்துகளை மொழிந்த வள்ளுவரின் திருக்குறள் உலகப் பொது மறையாகும். அறநெறிகளின் அற்புத சாரம். தமிழ்மொழியின் பெருஞ்சிறப்பு. மக்கள் வாழ்வில் உயர்வு பெற ஒளிகாட்டி வழிகாட்டும் உன்னத நூல். திருக்குறளின் இப்பெருமைகளை எல்லாம் பிரதமரின் வாய் மொழியாக கேட்கும் போது தமிழ் மக்களின் இதயங்கள் பூரிப்பில் பொங்கிவழிகின்றன.
இனம், மொழி, மத பேதங்கள் கடந்து உலகமாந்தர் அனைவருக்கும் பொருந் தும் வகையில் மானிட வாழ்வுக்கான அறம், பொருள், இன்பத்தை விளக்கிக்கூறும் திருக்குறளின் சிறப்பை மேற்கொள் காட்டிய பிரதமருக்கு எனது சார்பிலும், உலகத்தமிழர்கள் அனைவரது சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் பிரதமருக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் எழுதியுள்ளார்.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |