திருக்குறள் நீதிநூல் மட்டுமின்றி, வாழ்வியல் நூலாகவும் திகழ்கிறது

பிரதமரின் கருத்துகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலக பொதுமறையாம் திருக்குறள் நீதிநூல் மட்டுமின்றி, வாழ்வியல் நூலாகவும் திகழ்கிறது. இனம், மொழி, நாடுபோன்ற எல்லைகளை கடந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்வை நெறிப் படுத்தும் உயரிய நூலாகும். உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் தெய்வப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் ஒன்றாகும். இத்தகைய சிறப்புமிக்க திருக்குறளை இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் படித்து பயன் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது தமிழுக்கும், தமிழருக்கும் பெருமைசேர்ப்பதாகும்’’ என தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு நன்றிதெரிவித்து தமிழக துணை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப் பதாவது:

திருவள்ளுவ பெருமானின் பெருமையை புகழ்ந்துரைத்தும் வள்ளுவநெறியில் இந்தவையகம் வாழ்வுபெற வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருப்பதை கண்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.

ஒப்பில்லா கருத்துகளை மொழிந்த வள்ளுவரின் திருக்குறள் உலகப் பொது மறையாகும். அறநெறிகளின் அற்புத சாரம். தமிழ்மொழியின் பெருஞ்சிறப்பு. மக்கள் வாழ்வில் உயர்வு பெற ஒளிகாட்டி வழிகாட்டும் உன்னத நூல். திருக்குறளின் இப்பெருமைகளை எல்லாம் பிரதமரின் வாய் மொழியாக கேட்கும் போது தமிழ் மக்களின் இதயங்கள் பூரிப்பில் பொங்கிவழிகின்றன.

இனம், மொழி, மத பேதங்கள் கடந்து உலகமாந்தர் அனைவருக்கும் பொருந் தும் வகையில் மானிட வாழ்வுக்கான அறம், பொருள், இன்பத்தை விளக்கிக்கூறும் திருக்குறளின் சிறப்பை மேற்கொள் காட்டிய பிரதமருக்கு எனது சார்பிலும், உலகத்தமிழர்கள் அனைவரது சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் பிரதமருக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் எழுதியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...