அயோத்தியில் புதியமசூதி தேவையில்லை வசீம் ரிஜ்வீ

அயோத்தியில் புதியமசூதி தேவையில்லை என உத்திரப் பிரதேசம் ஷியா முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்தின் தலைவர் வசீம்ரிஜ்வீ  கூறியுள்ளார்.

ஷியா பிரிவு முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவரான வசீம்ரிஜ்வீ  நேற்று அயோத்தி வந்திருந்தார். கர்சேவக்புரம் சென்றவர் அங்குள்ள விஷ்வஇந்து பரிஷத்தினால் செய்து வைக்கப் பட்டுள்ள ராமர் கோயிலுக்கானக் கல்தூண்களை பார்வையிட்டார்.

பிறகு அங்கு தங்கியிள்ள ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளரான சம்பக் ராயுடன் சந்திப்பு நடத்தினார். பிறகு அயோத்தியின் முக்கிய மடங்களில் ஒன்றான திகம்பர் அகாடாவின் தலைவர் மஹந்த் சுரேஷ் தாஸுடனும் சந்தித்துபேசினார்.

இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய வசீம் ரிஜ்வீ கூறுகையில், ‘அயோத்தியில் தொழுகை நடத்து பவர்கள் குறைவாக உள்ளனர். இதனால், இங்கு புதியமசூதி கட்டவேண்டிய தேவையில்லை.

அயோத்தி என்னுடைய தாய் வீடு போன்றது. இங்கு கட்டப்பட உள்ள ராமர் கோயில் எனது நீண்ட கால விருப்பம் ஆகும்.’ எனத் தெரிவித்தார்.

ஷியா முஸ்லிம்களின் தலைவர் ரிஜ்வீ  டெல்லியின் வரலாற்று சின்னமான ஹுமாயூன் சமாதியை இடித்து முஸ்லிம்களின் இடுகாடாக மாற்றவேண்டும் எனவும், நாட்டின் மதரஸாக்களில் தீவிரவாதம் வளர்வதாகவும் ஏற்கனவே கூறி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது .

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...