” இலங்கையில் இருந்து திரும்பும் வழியில் ராமர் பாலத்தை தரிசிக்கும் ஆசி கிடைத்தது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இலங்கை சென்ற பிரதமர் மோடி, அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்தார். ஹெலிகாப்டரில் வரும் போது ராமர் பாலத்தை தரிசனம் செய்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், அத்துடன் பதிவில் கூறியுள்ளதாவது: இலங்கையில் இருந்து திரும்பும் வழியில் ராமர் பாலத்தை ஹெலிகாப்டரில் இருந்து தரிசனம் செய்யும் ஆசி கிடைத்தது. அயோத்தியில் சூரிய திலகம் நடந்த அதே வேலையில் தற்செயலாக ராமர் பாலத்தை தரிசித்தேன்.
இரு தரிசனத்தையும் பெறுவது பாக்கியம். நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக கடவுள் ஸ்ரீராமர் உள்ளார். அவரது ஆசிர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்து இருக்கட்டும். இவ்வாறு அந்த பதிவில் மோடி கூறியுள்ளார்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |