பல தசாப்த எதிர்பார்பு நிறைவேறியது இன்று

அயோத்தி: பலகாலமாக எதிர்பார்த்த நிகழ்வு இன்று நிறைவேறியுள்ளது, இந்தநிகழ்ச்சி மிகவும் உணர்வுப் பூர்மானது என்று, அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றதும், அருகே அமைக்கப்பட்ட மேடையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற விஐபிகள் அமர வைக்கபட்டனர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் ஆகியோர் உரைக்குபிறகு, பிரதமர் மோடி ஜெய் சியா ராம் என்ற கோஷத்துடன் தனது உரையை துவங்கினார்.

ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் அயோத்தியில் மட்டும் இன்று ஒலிக்கவில்லை. இந்த உலகம்முழுக்க இன்று எதிரொலித்து கொண்டிருக்கிறது. உலகம்முழுக்க உள்ள ராமபக்தர்களுக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன். கன்னியாகுமரி முதல் க்ஷர் பவணி வரை, கோட்டேஷ்வர் முதல் காமக்யா வரை, ஜெகந் நாத் முதல் கேதார்நாத் வரை, சோம்நாத் முதல் காஷி விஸ்வநாத் வரை இன்று முழு நாடும் ராமர்நாமத்தில் மூழ்கியுள்ளது.

ராமர் கோவில் எழுப்புவதற்காக பலதலைமுறைகள் தியாகம் செய்துள்ளனர். கோவில் கட்டுமானத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பலதசாப்தங்களாக எதிர்பார்த்திருந்த நிகழ்வு இன்று நடந்தேறி உள்ளது. இதுமிகவும் உணர்வு பூர்வமானது. நமது கலாச்சாரத்தின் நவீன சின்னமாக ராமர்கோவில் விளங்கப் போகிறது. அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அயோத்தி ராமர் கோவில் நமக்கு கற்றுத்தரப் போகிறது. இந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் ராமர் கோவில் உதவப்போகிறது. ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை என்னை அழைத்தது எனது அதிர்ஷ்டம், இந்த வரலாற்று தருணத்தை காண எனக்கு ஒருவாய்ப்பை அளித்தது. மனமார்ந்த நன்றி.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தலைவர்களை ராமர் ஈர்த்துள்ளார். காந்தியையும் ராமர்ஈர்த்தார். தமிழில் கம்பராமாயணம் என்றும், தெலுங்கு, ஒடியா, கன்னடம், மலையாளத்திலும் ராமாயண இதிகாசம் இயற்றப் பட்டது. ராமர் கோவில் அடிக்கல் விழாவிற்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை என்னை அழைத்தது எனது அதிருஷ்டம்.

இந்த கோயில் கட்டப்பட்டதன் மூலம், வரலாறு உருவாக்கப் படுவது மட்டுமல்லாமல், மீண்டும் உருவாக்கம் செய்யப் படுகிறது. படகில்செல்ல ராமருக்கு பழங்குடியினர் உதவியதுபோல, ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்தன மலையை உயர்த்தி பிடிக்க, குழந்தைகள் உதவியதுபோல, இறைவனின் திருவுள்ளத்தால், நமது பங்களிப்புடன், கோவில் கட்டுமானம் நிறைவடையும். இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள இந்தோனேஷியாவிலும், ராமாயணம் உள்ளது.

ராம ஜென்மபூமிக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 15 நாட்டிற்கான சுதந்திரதினம். அதே போன்றுதான், ராம பக்தர்களுக்கு இன்றைய தினம். தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த கோடிக்கணக்கான ராம பக்தர்களுக்கு இன்றைய நாள் முக்கியமானது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...