மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருவதால், ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்க இயலவில்லை. இதற்கிடையே, இந்தவிழா குறித்து அமித்ஷா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:-
இந்த நாள், வரலாற்று சிறப்புமிக்க, பெருமைக்குரிய நாள். ராமர்கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதன் மூலம், இந்திய வரலாற்றில் ஒருதங்க அத்தியாயத்தை பிரதமர் மோடி எழுதி உள்ளார். ஒருபுதிய சகாப்தத்தின் தொடக்கத்துக்கு கட்டியம் கூறுவதாக இது அமைந்துள்ளது. ராம பக்தர்களின் நூற்றாண்டு காலதியாகம், போராட்டம் ஆகியவற்றின் விளைவு தான், இந்த கோவில் கட்டுமானம். பிரதமர் மோடியின் வலிமையான, உறுதியான தலைமையை இது உணர்த் துகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |