ராணுவத் துறையில் அதிகளவு உற்பத்திக்கு முன்னுரிமை

‘ராணுவத் துறையில் தற்சார்பு நிலையை எட்ட, அதிகளவில் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உற்பத்திக்கு முன்னுரிமை தரப்படுகிறது’ என, பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டார்.

ராணுவத் துறையில் தற்சார்பு என்றதலைப்பில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையிலான மாநாடு நேற்று நடந்தது. இதில், பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

நாம் பல ஆண்டுகளாகவே, ராணுவ ஆயுதங்களை இறக்குமதிசெய்யும் நாடாகவே இருந்து வந்துள்ளோம்.நாடு சுதந்திரம் அடைந்தபோதே, உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிக்கும்திறன் நம்மிடம் இருந்தது. ஆனால், இதில் கவனம் செலுத்தப்பட வில்லை.தற்போது, தற்சார்பு திட்டத்தின்கீழ், ராணுவ ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிக்க முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தத்துறையில், அன்னிய நேரடி முதலீடு வரம்பும், 74 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது. இதன் மூலம், நம் நாட்டைச்சேர்ந்த நிறுவனங்கள், ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் ஆயுதம் தயாரிப்பது, நம்முடைய தேவைக்காக மட்டுமல்ல. இந்ததற்சார்பு, உலக அமைதி மற்றும் உலக பொருளாதாரத்தை வலுப் படுத்தும். இந்தியப் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்  படுத்தும். தற்சார்பு நிலையை எட்டுவதற்காக, ராணுவத் துறையில் அதிகளவு உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: ராணுத் துறையில் தற்சார்பு பெறுவதுடன், உலகின் ஏற்றுமதி நாடாகவும் நாம்விளங்க முடியும். அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்யும், 101 வகையான ஆயுதங்களுக்கு சமீபத்தில் தடை விதிக்கப் பட்டதும், அந்த நோக்கத்தில்தான்.’மேக் இன் இந்தியா’ என, இந்தியாவுக்காக உருவாக்குவதைவிட, உலக நாடுகளுக்காக உருவாக்கும் நாடாக, நாம் விரைவில் இருப்போம். இவ்வாறு, அவர் பேசினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...