ராணுவத் துறையில் அதிகளவு உற்பத்திக்கு முன்னுரிமை

‘ராணுவத் துறையில் தற்சார்பு நிலையை எட்ட, அதிகளவில் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உற்பத்திக்கு முன்னுரிமை தரப்படுகிறது’ என, பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டார்.

ராணுவத் துறையில் தற்சார்பு என்றதலைப்பில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையிலான மாநாடு நேற்று நடந்தது. இதில், பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

நாம் பல ஆண்டுகளாகவே, ராணுவ ஆயுதங்களை இறக்குமதிசெய்யும் நாடாகவே இருந்து வந்துள்ளோம்.நாடு சுதந்திரம் அடைந்தபோதே, உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிக்கும்திறன் நம்மிடம் இருந்தது. ஆனால், இதில் கவனம் செலுத்தப்பட வில்லை.தற்போது, தற்சார்பு திட்டத்தின்கீழ், ராணுவ ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிக்க முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தத்துறையில், அன்னிய நேரடி முதலீடு வரம்பும், 74 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது. இதன் மூலம், நம் நாட்டைச்சேர்ந்த நிறுவனங்கள், ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் ஆயுதம் தயாரிப்பது, நம்முடைய தேவைக்காக மட்டுமல்ல. இந்ததற்சார்பு, உலக அமைதி மற்றும் உலக பொருளாதாரத்தை வலுப் படுத்தும். இந்தியப் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்  படுத்தும். தற்சார்பு நிலையை எட்டுவதற்காக, ராணுவத் துறையில் அதிகளவு உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: ராணுத் துறையில் தற்சார்பு பெறுவதுடன், உலகின் ஏற்றுமதி நாடாகவும் நாம்விளங்க முடியும். அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்யும், 101 வகையான ஆயுதங்களுக்கு சமீபத்தில் தடை விதிக்கப் பட்டதும், அந்த நோக்கத்தில்தான்.’மேக் இன் இந்தியா’ என, இந்தியாவுக்காக உருவாக்குவதைவிட, உலக நாடுகளுக்காக உருவாக்கும் நாடாக, நாம் விரைவில் இருப்போம். இவ்வாறு, அவர் பேசினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...