ராணுவத் துறையில் அதிகளவு உற்பத்திக்கு முன்னுரிமை

‘ராணுவத் துறையில் தற்சார்பு நிலையை எட்ட, அதிகளவில் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உற்பத்திக்கு முன்னுரிமை தரப்படுகிறது’ என, பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டார்.

ராணுவத் துறையில் தற்சார்பு என்றதலைப்பில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையிலான மாநாடு நேற்று நடந்தது. இதில், பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

நாம் பல ஆண்டுகளாகவே, ராணுவ ஆயுதங்களை இறக்குமதிசெய்யும் நாடாகவே இருந்து வந்துள்ளோம்.நாடு சுதந்திரம் அடைந்தபோதே, உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிக்கும்திறன் நம்மிடம் இருந்தது. ஆனால், இதில் கவனம் செலுத்தப்பட வில்லை.தற்போது, தற்சார்பு திட்டத்தின்கீழ், ராணுவ ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிக்க முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தத்துறையில், அன்னிய நேரடி முதலீடு வரம்பும், 74 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது. இதன் மூலம், நம் நாட்டைச்சேர்ந்த நிறுவனங்கள், ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் ஆயுதம் தயாரிப்பது, நம்முடைய தேவைக்காக மட்டுமல்ல. இந்ததற்சார்பு, உலக அமைதி மற்றும் உலக பொருளாதாரத்தை வலுப் படுத்தும். இந்தியப் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்  படுத்தும். தற்சார்பு நிலையை எட்டுவதற்காக, ராணுவத் துறையில் அதிகளவு உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: ராணுத் துறையில் தற்சார்பு பெறுவதுடன், உலகின் ஏற்றுமதி நாடாகவும் நாம்விளங்க முடியும். அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்யும், 101 வகையான ஆயுதங்களுக்கு சமீபத்தில் தடை விதிக்கப் பட்டதும், அந்த நோக்கத்தில்தான்.’மேக் இன் இந்தியா’ என, இந்தியாவுக்காக உருவாக்குவதைவிட, உலக நாடுகளுக்காக உருவாக்கும் நாடாக, நாம் விரைவில் இருப்போம். இவ்வாறு, அவர் பேசினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...