தேசத்தின் புகழ்பெற்ற தலைவருக்கு வாழ்த்துகள்

நாட்டுக்காகவும், ஏழைகளின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும்  தேசத்தின் புகழ்பெற்ற தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று பிரதமர் மோடிக்கு 70-வது பிறந்த நாள் வாழ்த்துகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு இன்று 70-வது பிறந்தநாளாகும். இதையடுத்து, பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பாஜக சார்பில் மோடியின் பிறந்தநாளையொட்டி நாடுமுழுவதிலும் செப்டம்பர் 14 முதல் 20-ம் தேதி வரை சேவை வாரம் கொண்டாடப்படுகிறது. சேவை வார விழாவை முன்னிட்டு ரத்ததா முகாம்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோவில்களில் சிறப்புவழிபாடுகள் போன்றவற்றுக்கு பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமி்த்ஷா ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில் “நாட்டுக்காகவும், ஏழைகளின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவைசெய்யும் தேசத்தின் புகழ்பெற்ற தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். மோடியின் வடிவத்தில், தாழ்த்தப்பட்ட மக்களை வளர்ச்சியின் பிரதான நீரோட்டத்துடன் இணைத்து, வலுவான இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்த ஒருதலைவரை நாடு பெற்றுள்ளது.

நீண்டகாலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்வாழும் நாட்டின் ஏழை மக்களுக்கு வீடுகள், மின்சாரம், வங்கிக் கணக்கு, கழிவறை, ஏழை தாய்மார்களுக்கு உஜ்வாலாத் திட்டத்தின் கீழ் இலவச சமையல்  கேஸ் இணைப்பு வழங்கப்பட்டன.

மதிப்புக்குரிய வாழ்க்கையை சமூகத்தில் வாழவே இவை வழங்கப்பட்டன.
பிரதமரின் தீர்க்கமான உறுதியும், வலுவான விருப்பமும் காரணமாக மட்டுமே இவையனைத்தும் சாத்தியமாகியுள்ளன.

ஒருவலுவான, பாதுகாப்பான, தற்சார்பு இந்தியாவை உருவாக்க தனது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் செலவழிக்கும் ஒருசிறந்த தலைவர் நரேந்திர மோடி தலைமையில் பாரதமாதாவுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பது ஒருபாக்கியம்.

நானும், கோடிக்கணக்கான மக்களுடன் சேர்ந்து, பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்டகாலம் வாழவும் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...