அறிவு, தொழில்முனைதல், புதுமைகள் மற்றும் திறன்வளர்த்தல் ஆகியவற்றின் மையமாக ஜம்மு-காஷ்மீரை பார்ப்பதே எனது லட்சியம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான மாநாட்டில் பேசியதாவது.
ஜம்மு-காஷ்மீரை பூமியின் சொர்க்கமாகவும், பாரதமாதாவின் மகுடத்தில் ஒளிரும் மாணிக்கமகவும் மாற்ற நாம்பாடுபடுவோம் .
ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர், அங்குள்ள பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் ஸ்ரீ நகரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
அவர்களிடையே காணொலி மூலம் உரையாற்றிய குடியரசுத் தலைவர், உறுதியான முயற்சிகளின் மூலம் தேசியகல்விக் கொள்கையை ஜம்மு-காஷ்மீரில் செயல்படுத்தி, இந்தசொர்க்கத்தை அறிவு, புதுமைகள் மற்றும் கற்றலின் மையமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |