உற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன

கிராமப் புறங்களில் தொழில்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. டிராக்டர் விற்பனை, விவசாய உபகரணங்கள் விற்பனை அதிகரித்துள்ளது’ என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கொரோனாதொற்று ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகளை தணிக்க கடந்த மே மாதம், ரூ.20 லட்சம்கோடி ஊக்குவிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது: ஊக்குவிப்பு திட்டங்கள் முடிந்துவிட வில்லை. தேவைப்பட்டால் தொடரும். அவசரகால கடன் உத்தரவாதம் திட்டத்தின் பலன்கள் எம்.எஸ்.எம்.ஈ.,க்களுக்கு மட்டுமின்று தனிப்பட்ட உரிமையாளர்கள், கூட்டு உரிமையாளர்கள் ஆகியோருக்கும் விரிவுப்படுத்தப் பட்டுள்ளது. வங்கிகளுக்கு அதிக பணப்புழக்கம் வழங்கப்பட்டது.

பொருளாதார நடவடிக்கைகளை கொரோனா மோசமாக பாதித்துள்ளது. குறிப்பாக ஜிடிபி.,யில் 55% பங்குகொண்ட சேவைத்துறை பெரிதும் பாதிப்புக்குள்ளானது. உற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பணிக்கு திரும்புகின்றனர்.

வேறு எந்தநாட்டிலும் இல்லாத வகையில் நேரடியாக மக்கள் வங்கிகணக்கு பணம் செலுத்தும் வசதி இந்தியாவில் உள்ளது. இதனால் தேவைப்படும் நபருக்கு பணம் சென்றடைந்ததா என்பது குறித்து அரசு கவலைப்பட தேவையில்லாமல் போனது. விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.2,000 சென்றடைந்துள்ளது. கிராமப் புறங்களில் தொழில்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. அந்த பகுதிகளில், டிராக்டர் விற்பனை, விவசாய உபகரணங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...