அக்டோபர் 3 உலகின் மிக நீள சுரங்க பாதையை திறக்கும் பிரதமர்

பிரதமர்  நரேந்திர மோடி 2020 அக்டோபர் 3 ம் தேதி  ரோட்டங்கில் அடல் சுரங்கப் பாதையைத் திறந்து வைக்கிறார்.

          உலகில் மிக நீளமான சுரங்க நெடுஞ் சாலையாக இதுஇருக்க போகிறது . 9.02 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்கநெடுஞ்சாலை, மணாலியையும் லாஹாவ் – ஸ்பிட்டி பள்ளத்தாக்கை  இணைப்பதாகவும் ஆண்டு முழுவதும் போக்குவரத்து தங்கு தடைகளின்றி நடைபெறும் வகையிலும்  அமைக்கப்பட் டுள்ளது. இதற்கு முன்பு கடும் பனிப்பொழிவின் காரணமாக வருடத்துக்கு 6 மாத காலத்துக்கு மட்டுமே போக்குவரத்துகள் இருக்கும்.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 மீட்டர்கள் (10,000 அடி) உயரத்தில்இமயமலையில் பிர் பஞ்சால் பகுதியில் அதிநவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்க பட்டது. மணாலி மற்றும் லே இடையிலான சாலைப் பயண தூரத்தை 46 கிலோ மீட்டர் அளவுக்குக் குறைப்பதாகவும்பயண நேரத்தை 4 முதல் 5 மணி நேரம்வரை குறைப்பதாகவும் இது இருக்கும்.

அடல் சுரங்கப் பாதையின் தெற்கு முனைப் பகுதி, 3060 மீட்டர் உயரத்தில் மணாலியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் வடக்கு முனையம் பகுதி 3071 மீட்டர் உயரத்தில் லாஹாவ் பள்ளத்தாக்கில் சிஸ்ஸுடெலிங் கிராமம் அருகே அமைந்துள்ளது.

குதிரை லாடத்தின் வடிவத்தில் அமைந்துள்ள ஒரே சுரங்கமாகஇரண்டு லேன்கள் கொண்ட இந்தப் பாதையில்வாகனங்கள்செல்ல 8 மீட்டர் அகலத்துக்கு இடவசதி உள்ளது. 5.525 மீட்டர் உயரம் வரையிலான வாகனங்கள் இதில் செல்லலாம்.

இந்தப் பாதை 10.5 மீட்டர் அகலம் கொண்டது. 3.6 X 2.25 மீட்டர் அளவில் தீ பிடிக்காதஅவசர கால சுரங்கம்பிரதான சுரங்கத்துடன் இணைக்கப்பட்டதாக இருக்கிறது.

தினமும் 3000 கார்கள் மற்றும் 1500 லாரிகள் செல்லும்வகையில் அதிகபட்சம் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய வகையில் அடல் சுரங்கப் பாதை அமைக்கப் பட்டுள்ளது.

அதிநவீன எலெக்ட்ரோ மெக்கானிக்கல் நடைமுறைகளைக் கொண்டதாககாற்றோட்டவசதி கொண்டதாக, SCADA கட்டுப்பாட்டில் இயங்கும் தீயணைப்பு அம்சங்கள் கொண்டதாகவெளிச்சம்கொண்டகண்காணிப்பு முறைமைகள் கொண்டதாக இந்தப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதையில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில:

 

a.       இரு முனையங்களிலும் சுரங்கத்தில் நுழையும்இடத்தில் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள்.

b.       அவசரகால தகவல் தொடர்புக்கு 150 மீட்டர் இடைவெளியில் தொலைபேசி இணைப்புகள்

c.       60 மீட்டர்களுக்கு ஒரு இடத்தில் தீயணைப்பு குழாய்வசதிகள்

d.       250 மீட்டர் இடைவெளியில் சிசிடிவி பொருத்திஏதும் நிகழ்வுகளை தானாகவே கண்டறியும்வசதி.

e.       1 கிலோ மீட்டர் இடைவெளியில் காற்றின்தரத்தை கண்காணிக்கும் வசதி

f.       வெளிச்சம் ஏற்படுத்துதல் / பயணவழிகாட்டி பலகைகள் 25 மீட்டர் இடைவெளியில் அமைக்கப் பட்டுள்ளன.

g.       சுரங்கப் பாதை முழுக்க வழிகாட்டும் தகவல் அறிவிப்பு வசதி.

h.      50 மீட்டருக்கு ஒருஇடத்தில் தீ பிடிக்காத தரம் கொண்ட காற்று சீர் செய்யும் சாதனங்கள்

i.       60 மீட்டர் இடைவெளியில் கேமராக்கள்.

 

ரோட்டங் கணவாய்க்கும்கீழே முக்கியமான இந்த சுரங்கப் பாதையை உருவாக்குவதற்கான வரலாற்று முக்கியத்துவமான முடிவு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2000 ஜூன் 03 ஆம் தேதி எடுக்கப்பட்டது. தெற்கு முனையத்தை இணைப்பதற்கான சாலைக்கு 2002 மே 26 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

பெரிய புவியியல்மலைப்பரப்பு மற்றும் வானிலைசவால்களை முறியடிக்கும் பணியில் எல்லைப் பகுதிசாலைகள் அமைப்பு நிறுவனம் (பி.ஆர்.ஓ.) தொடர்ந்து மேற்கொண்டது. மிகவும் கடுமையான 587 மீட்டர்  நீளம்கொண்ட செரி நளா பால்ட் பகுதி சாலையும் இதில் அடங்கும். இரு முனையங்களில் இருந்தும் இணைப்பு வசதி 2017 அக்டோபர் 15 ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது.

2019 டிசம்பர் 24 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்முன்னாள் பிரதமர்  அடல் பிகாரி வாஜ்பாய் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில்ரோட்டங் சுரங்கப்பாதைக்கு அவரது பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டது.

மணாலியில் தெற்கு முனையத்தில் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பிரதமர்  நரேந்திர மோடி லாஹாவ் ஸ்பிட்டி மற்றும் சோலாங் பள்ளத்தாக்கில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...