அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடனுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளார். இந்திய – அமெரிக்க உறவின் முக்கியத்துவம் குறித்து தாங்கள் உரையாடியதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இருநாடுகளும் முன்னுரிமை கொடுக்கவேண்டிய பிரச்னைகள், கொரோனா தொற்று, காலநிலை மாற்றம் மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
இதேபோல், அமெரிக்க துணைஅதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிசுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்ததாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அவரதுவெற்றி, இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு மிகப் பெரிய பலமாக விளங்கும் என்றும், கமலா ஹாரிஸின் வெற்றி துடிப்பான இந்திய-அமெரிக்க சமூகத்தினருக்கு மிகுந்தபெருமை மற்றும் உத்வேகம் அளிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |