அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடனுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளார். இந்திய – அமெரிக்க உறவின் முக்கியத்துவம் குறித்து தாங்கள் உரையாடியதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இருநாடுகளும் முன்னுரிமை கொடுக்கவேண்டிய பிரச்னைகள், கொரோனா தொற்று, காலநிலை மாற்றம் மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
இதேபோல், அமெரிக்க துணைஅதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிசுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்ததாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அவரதுவெற்றி, இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு மிகப் பெரிய பலமாக விளங்கும் என்றும், கமலா ஹாரிஸின் வெற்றி துடிப்பான இந்திய-அமெரிக்க சமூகத்தினருக்கு மிகுந்தபெருமை மற்றும் உத்வேகம் அளிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |