அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடனுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளார். இந்திய – அமெரிக்க உறவின் முக்கியத்துவம் குறித்து தாங்கள் உரையாடியதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இருநாடுகளும் முன்னுரிமை கொடுக்கவேண்டிய பிரச்னைகள், கொரோனா தொற்று, காலநிலை மாற்றம் மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
இதேபோல், அமெரிக்க துணைஅதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிசுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்ததாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அவரதுவெற்றி, இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு மிகப் பெரிய பலமாக விளங்கும் என்றும், கமலா ஹாரிஸின் வெற்றி துடிப்பான இந்திய-அமெரிக்க சமூகத்தினருக்கு மிகுந்தபெருமை மற்றும் உத்வேகம் அளிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |