மேற்குவங்கம் 11 பேர் கொண்ட குழுவுடன் தயாராகும் பாஜக…

பீகார் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியதை தொடர்ந்து அடுத்தஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் கவனம்செலுத்த ஆரம்பித்துள்ளது பாஜக.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு பல்வேறு மாநிலங்களுக்குப் புதிய பொறுப்பாளர்களை, அண்மையில் பா.ஜ.க நியமித்தது. குறிப்பாக அதிக கவனம் செலுத்தவேண்டிய மாநிலமாக, மேற்கு வங்கத்தை பா.ஜ.க தேர்ந்தெடுத்துள்ளது. 16 உறுப்பினர்களை மட்டுமே மேற்கு வங்க சட்டசபையில் கொண்டுள்ள பா.ஜ.க கடந்தண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 42 இடங்களில் 18 இடங்களை கைப்பற்றி திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியளித்தது. அங்கு கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ள பா.ஜ.க இம்முறை சட்டசபைத்தேர்தலில் மம்தாவுக்குப் போட்டியாக உருவெடுக்க முயன்று வருகிறது. எனவே இதற்காக மேற்குவங்க பாஜக பொறுப்பாளராக மூத்த தலைவர் கைலாஷ் விஜய் வர்கியாவை நியமித்தது பா.ஜ.க.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிடவும், அதற்கான பணிகளை மேற்பார்வையிடவும், 11 பேர்கொண்ட குழு ஒன்றை அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முழுவதும் முக்கியத் தலைவர்களை கொண்டு அமைக்கபட்டுள்ள, இந்தக்குழுவில் கட்சி பொதுச்செயலாளர்கள் கைலாஷ் விஜயவர்ஜியா மற்றும் துஷ்யந்த் கவுதம், சுனில் தியோதர், வினோத் தவ்தே, வினோத் சோன்கர், ஹரிஷ் திவேதி, அமித்மால்வியா, மாநிலத் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாஜகவின் திட்டப்படி, மேற்குவங்கத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, இந்தக்குழு தேர்தல் பணியாற்றும் என்றும், வேட்பாளர்தேர்வும் இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் குழுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசியதலைவர் ஜே.பி நட்டா ஆகிய இருவரும் வழிநடத்த உள்ளதாகவும், இந்தக்குழுவில் உள்ள சில தலைவர்கள் கொல்கத்தாவில் ஏற்கனவே ஆலோசனைக்கூட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.