கர்மாவுக்கு தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்

வசிஷ்ட முனிவர் மகாமேரு மலையினில் ஆசிரமத்தை அமைத்து வாழ்ந்துவந்தார். ஆசிரமத்தின் சுற்று புறம் இயற்கை அழுகுடன் விளங்கியது . இங்கு தேவலோகத்தில் இருந்து அஷ்டவசுக்கள் தங்களது மனைவியருடன் வந்தனர். மலையெங்கும் சுற்றி விளாயாடினர் மகிழ்ந்தனர்; ஒவ்வோர் இடமாய் சுற்றி பார்த்துகொண்டு வந்தனர்.

அப்போது வசிஷ்டரின் ஆசிரமத்தில் தெய்விக தன்மை கொண்ட அழகிய பசு மேய்ந்து கொண்டிருந்தது. அதை_அஷ்டவசுக்களில் கடைசியாக இருந்த பிரபாசன் மனைவி கேட்க பிரபாசன் தன் மனைவியின் மீது கொண்ட காதலினால் திருடி சென்று விட்டான்

ஆசிரமத்தில் இருந்த பசுவை "அஷ்டவசுக்கள்" திருடி சென்று விட்டதை கண்டு வசிஷ்ட முனிவர் கடும் கோபம் கொண்டார், அஷ்டவசுக்கள் மண்ணுலகில் மனிதர்களாய் பிறக்க சாபமிட்டார்.

அஷ்டவசுக்கள் தேவலோகதிலிருந்து பயந்துநடுங்கி ஓடோடி_வந்து வசிஷ்டரின் காலில் விழுந்தனர் . மன்னிப்புகேட்டனர். சாப விமோசனம் தருமாறு கெஞ்சினர். கோபம் குறைந்த , வசிஷ்டர் அவர்களைநோக்கி, "பிரபாசனை தவிர நீங்கள் அனைவரும் பூமியில் ஒவ்வொருவராக பிறப்பீர்கள்; ஓராண்டுக்கு பிறகு சாபவிமோசனம் அடைவீர்கள். ஆனால் பிரபாசன்_மட்டும் உங்களுக்கு பிறகு பிறப்பான். நீண்டகாலம் வாழ்வான்; சாஸ்திரங்ககள் அனைத்தையும் கற்று வல்ல வனாவான்; பெண்ணாசை கொள்ளமாட்டான்; தர்மாத்மாவாக வாழ்வான்; தந்தையினுடைய விருப்பத்தை நிறைவேற்றுவனாக வாழ்வான் " என கூறினார்.

அஷ்டவசுக்கள் தங்களுக்கு "கங்கையே" தாயாகவேண்டும் என விரும்பினர். கங்கை அஷ்டவசுக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக கூறினாள். அதற்க்குரிய காலம் வந்தது.

சில காலம் பொறுத்து பூமியில் பிரதீபா என்ற மன்னனின் மகனாகப் பிறந்து இருந்த சந்தனுவுக்கு கங்கை மனைவியானால் . அவர்களுக்கு அஷ்டவசுக்கள் மகன்களாக பிறந்து இருந்தனர். அந்த திருமணம் நடக்கும் முன் கங்கை சந்தனுவிடம் ஒரு சத்தியம் பெற்று இருந்தாள்.

பிறக்கும் குழந்தையை தான் என்ன செய்தாலும் அதை அவன் தடுக்கக் கூடாது என்பது . பிறகு குழந்தை பிறந்தது , ஆனால் ஒன்றன் பின் ஒன்றாக முதலில் பிறந்த ஏழு குழந்தைகளையும் அவள் நதியில் வீசி எறிந்துவிட்டு அவர்களின் சாபத்தை அழித்தாள். அதைப் பார்த்துக் கொண்டே இருந்த சந்தனு மன வேதனை அடைந்தார்.

எட்டாவது குழந்தை பிறந்தது. அதை நதியில் போட கங்கை போனபோது அவளை தடுத்து நிறுத்தினார் சந்தனு. அவ்வளவுதான் கங்கை மறைந்தாள். குழந்தையை சந்தனுவே வளர்க்க வேண்டியதாயிற்று. அந்தக் குழந்தை யார் தெரியுமா? அதுவே பீஷ்மர். முன் பிறவியில் வஷிஷ்ட முனிவரின் காமதேனுப் பசுவை தன் மனைவியின் ஆசைக்காகத் திருடி வெகு காலம் பூமியில் பிறவி எடுத்து சங்கடங்களை அனுபவித்தே மரணம் அடைய வேண்டும் என சாபம் பெற்று இருந்த அஷ்டவசுக்களில் ஒருவர்

Tags; கர்ம வினை , கர்மா , கர்மாவை, கர்மாக்களை, கர்மாக்கள், கர்ம யோகம்

நன்றி ராமசந்திரன்  

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...