தைப்பூச விழாவுக்கு, விடுமுறை அளிக்க வேண்டும்

தைப்பூசத்திருநாளை தமிழகஅரசு விடுமுறையாக அறிவிக்கவேண்டும் என்று கோவையில் நடைபெற்ற வேல்யாத்திரை பொதுக் கூட்டத்தில் பா.ஜ.,மாநிலத் தலைவர் முருகன் வலியுறுத்தினார்.

கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற வேல்யாத்திரை பொதுக்கூட்டத்தில், கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் பேசியதாவது: வெற்றிவேல் வீரவேல் என்று தமிழில் உரையை துவங்கினார். தமிழ்கடவுள் முருகனையும், கந்தசஷ்டிக் கவசத்தையும் அவதூறாகப் பேசிய கருப்பர் கூட்டத்தை சாதாரணமாக விட்டுவிடக் கூடாது.

கருப்பர் கூட்டத்துக்கு பின்னணியில் இருப்பது திமுக., என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திமுக.வின் இந்துவிரோத போக்கிற்கு எதிராக பாஜக ., தொண்டர்கள் பொங்கி எழுந்துள்ளனர். தமிழகமக்கள் பா.ஜ.,அரியணையில் ஏறுவதற்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
தமிழகத்தை தாண்டி, கர்நாடகா, தெலுங்கான, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தமிழக பா.ஜ.,நடத்திவரும் வேல் யாத்திரை குறித்து ஒவ்வொரு நாளும் பேசப்பட்டுவருகிறது. இவ்வாறு துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் பேசினார்.

பா.ஜ., மாநில தலைவர் முருகன் பேசியதாவது:, வேல்யாத்திரையை துவங்கியதிலிருந்து தி.மு.க.,தலைவர் ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது. அதற்கேற்ப வேல் யாத்திரை அமைதியாக நடந்துவருகிறது. கடலூர், திருவண்ணாமலையில் மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது..கொரோனா வைரஸிற்கு பயந்து திமுக., தலைவர் ஸ்டாலின் வீட்டைவிட்டு வெளியேறாமல் இருந்தார். ஆனால் பா.ஜ.,வினர் கொரோனா ஊரடங்குகாலத்திலும் வெளியே வந்து ஏழை எளியவர்களுக்கு உணவுசமைத்து வழங்கினோம்.

கபசுரகுடிநீர், மாஸ்க், உடலுக்கு எதிர்ப்புச்சத்து வரவழைக்கும் மருந்துகளையும் பொருட்களையும் வழங்கினோம்.கந்த சஷ்டி கவசத்தையும் தமிழ்கடவுள் முருகனையும் இழிவுபடுத்தியவர்களுக்கு தக்கபாடம் புகட்டப்படும். ஊழல் என்பது திமுக.,வுடன் பிறந்தது. ஊழலையும் திமுக.,வையும் பிரிக்கமுடியாது. தி.மு.க.,ஆட்சியைப் பிடிக்கும் கனவு கனவாகவே இருக்கும்.மற்ற மத பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை விடப்படுவதுபோல தமிழ்க்கடவுள் முருகப் பெருமானின் தைப்பூச விழாவுக்கு, தமிழகஅரசு விடுமுறை அளிக்கவேண்டும். இவ்வாறு முருகன் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...