தைப்பூச விழாவுக்கு, விடுமுறை அளிக்க வேண்டும்

தைப்பூசத்திருநாளை தமிழகஅரசு விடுமுறையாக அறிவிக்கவேண்டும் என்று கோவையில் நடைபெற்ற வேல்யாத்திரை பொதுக் கூட்டத்தில் பா.ஜ.,மாநிலத் தலைவர் முருகன் வலியுறுத்தினார்.

கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற வேல்யாத்திரை பொதுக்கூட்டத்தில், கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் பேசியதாவது: வெற்றிவேல் வீரவேல் என்று தமிழில் உரையை துவங்கினார். தமிழ்கடவுள் முருகனையும், கந்தசஷ்டிக் கவசத்தையும் அவதூறாகப் பேசிய கருப்பர் கூட்டத்தை சாதாரணமாக விட்டுவிடக் கூடாது.

கருப்பர் கூட்டத்துக்கு பின்னணியில் இருப்பது திமுக., என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திமுக.வின் இந்துவிரோத போக்கிற்கு எதிராக பாஜக ., தொண்டர்கள் பொங்கி எழுந்துள்ளனர். தமிழகமக்கள் பா.ஜ.,அரியணையில் ஏறுவதற்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
தமிழகத்தை தாண்டி, கர்நாடகா, தெலுங்கான, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தமிழக பா.ஜ.,நடத்திவரும் வேல் யாத்திரை குறித்து ஒவ்வொரு நாளும் பேசப்பட்டுவருகிறது. இவ்வாறு துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் பேசினார்.

பா.ஜ., மாநில தலைவர் முருகன் பேசியதாவது:, வேல்யாத்திரையை துவங்கியதிலிருந்து தி.மு.க.,தலைவர் ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது. அதற்கேற்ப வேல் யாத்திரை அமைதியாக நடந்துவருகிறது. கடலூர், திருவண்ணாமலையில் மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது..கொரோனா வைரஸிற்கு பயந்து திமுக., தலைவர் ஸ்டாலின் வீட்டைவிட்டு வெளியேறாமல் இருந்தார். ஆனால் பா.ஜ.,வினர் கொரோனா ஊரடங்குகாலத்திலும் வெளியே வந்து ஏழை எளியவர்களுக்கு உணவுசமைத்து வழங்கினோம்.

கபசுரகுடிநீர், மாஸ்க், உடலுக்கு எதிர்ப்புச்சத்து வரவழைக்கும் மருந்துகளையும் பொருட்களையும் வழங்கினோம்.கந்த சஷ்டி கவசத்தையும் தமிழ்கடவுள் முருகனையும் இழிவுபடுத்தியவர்களுக்கு தக்கபாடம் புகட்டப்படும். ஊழல் என்பது திமுக.,வுடன் பிறந்தது. ஊழலையும் திமுக.,வையும் பிரிக்கமுடியாது. தி.மு.க.,ஆட்சியைப் பிடிக்கும் கனவு கனவாகவே இருக்கும்.மற்ற மத பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை விடப்படுவதுபோல தமிழ்க்கடவுள் முருகப் பெருமானின் தைப்பூச விழாவுக்கு, தமிழகஅரசு விடுமுறை அளிக்கவேண்டும். இவ்வாறு முருகன் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...