ஐதராபாத்தை ஐடி மையமாக மாற்றுவோம்

ஐதராபாத் மேயராக பா.ஜ.,வை சேர்ந்தவர் தேர்வுபெற்றால், அங்கு சிறந்தநிர்வாகம் அளிப்பதுடன், நகரை, ஐடி துறையின் மையமாக மாற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் மாநகராட்சிக்கு டிச.,1 அன்று நடக்கும்தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., சார்பில் பிரமாண்ட பேரணி நடந்தது. செகந்திராபாத்தில் உள்ள வரசிகுடா என்ற இடத்தில் நடந்தபேரணியில் அமித்ஷா பங்கேற்றார். அவருக்கு சாலை நெடுகிலும் பா.ஜ., தொண்டர்கள் உற்சாகவரவேற்பு அளித்தனர்.

பின்னர் அமித்ஷா கூறியதாவது: ஐடி துறையின் மையமாக மாறும்திறன் ஐதராபாத்திற்கு உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் உள்கட்டமைப்பு வசதிகளை மாநகராட்சிதான் நிறைவேற்ற வேண்டும். ஆனால், தற்போதைய டிஆர்எஸ் காங்கிரஸ் நிர்வாகத்தில், அதற்கு பெரியதடை ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.,வுக்கு பெரியளவில் ஆதரவளித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இன்று நடந்தபேரணிக்கு பிறகு, பா.ஜ.,வின் இருப்பு மற்றும் உறுப்பினர் எண்ணிக்கைக்காக மட்டும் போராட்டமாக இந்ததேர்தல் இருக்காது எனவும், பா.ஜ.,வை சேர்ந்த ஒருவரே மேயராக இருப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

உலகளவில், ஐதராபாத் நகரை ஐடி மையமாக மாற்றுவதற்கு ஆளும் டிஆர்எஸ் மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் பெரியதடையாக உள்ளது. சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்துகின்றன. மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நகரம் இடர்பாடுகளை சந்தித்தபோது, ஓவைசியும், முதல்வரும் எங்கே இருந்தார்கள். மாநகராட்சியில் நாங்கள் சிறந்தநிர்வாகத்தை தருவதுடன், ஐடி மையமாக மாற்றுவோம் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

150 வார்டுகள்கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கு, டிச.,1 அன்று தேர்தல் நடக்கும் நிலையில், முடிவுகள் 4ம் தேதி வெளியிடப்படுகின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...