மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆயுஷ்மையங்களில் சிகிச்சை பெறும் திட்டத்துக்கு மத்திய சுகாதாரத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி தனியார் ஆயுர்வேத, யோகா மற்றும் இயற்கை வைத்திய மையங்கள் மத்திய அரசின் சுகாதார திட்டகுழுவில் இணைக்கப்படும்.
இந்த மையங்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். மக்களிடையே ஆயுஷ்சிகிச்சை முறைகள் பிரபலம் அடைந்து வருவதால், இந்த நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.
முன்மாதிரி திட்டமாக முதலில் தில்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில் உள்ள ஆயுஷ் சிசிச்சைமையங்கள், மத்திய அரசின் சுகாதார திட்ட குழுவில் ஓராண்டுக்கு இணைக்கப்படும். அதைத்தொடர்ந்து இத்திட்டத்தை மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |