ஐம்பொன் வேலை காணிக்கையாக செலுத்திய எல் முருகன்

பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரையில் கொண்டு வரப்பட்ட ஐம்பொன் வேலை, திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் உண்டியலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று காணிக்கையாக செலுத்தினார். யாத்திரை நிறைவுவிழா பொதுக்கூட்டம் இன்று (டிச.7) திருச்செந்தூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,போலீஸார் அனுமதி மறுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை கடந்த நவ.6-ம்தேதி திருத்தணியில் தொடங்கியது. இந்தயாத்திரை முருகப்பெருமானின் அறுபடைவீடுகள் வழியாக திருச்செந்தூரில் டிச.6-ம் தேதி நிறைவடையும் எனவும், டிச.7-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவுவிழா பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று காலை திருச்செந்தூர் வந்து செந்திலாண்டவர் கோயிலில் சுவாமி தரிசனம்செய்தார். முன்னதாக வெற்றிவேல் யாத்திரையில் கொண்டுவந்த வேலுடன், அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து கோயிலுக்கு நடந்தே வந்தார். கோயிலில் சுவாமிதரிசனம் செய்த பிறகு, தங்க கொடிமரம் அருகில் உள்ள உண்டியலில், தான் கொண்டுவந்த ஐம்பொன்னால் ஆன சுமார் 3 அடி உயர வேலை காணிக்கையாக செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ் கடவுள் முருகனை போற்றும் கந்தசஷ்டி கவசத்தை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் திரித்துவெளியிட்டனர். இதை யாரும் கேள்வி கேட்கவில்லை. 4 பேரை தமிழக அரசு கைதுசெய்தது. கைது செய்யப்பட்ட செந்தில்வாசன் என்பவர் திமுகவின் ஐடி பிரிவில் வேலைசெய்ததாக கூறியுள்ளார். திமுகவும் அதை மறுக்கவில்லை. எனவே, இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து தமிழ்மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக வேல்யாத்திரை தொடங்கப்பட்டது.

சுவாமிமலை, பழமுதிர்ச் சோலை, திருப்பரங்குன்றம் வழியாக திருச்செந்தூர்வந்து முருகப்பெருமானிடம் வேலை காணிக்கையாக செலுத்தி இருக்கிறேன். யாத்திரை நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் இன்று (டிச.7) நடக்கிறது. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கலந்துகொள் கிறார் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...