மேற்கு வங்க டிஜிபி ,தலைமைச் செயலருக்கு சம்மன்

மேற்குவங்கத்தில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா சென்றவாகனம் மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மேற்கு வங்க டிஜிபி மற்றும் தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

மேற்குவங்க தலைமைச் செயலாளரும், காவல்துறை டிஜிபியும், விரைவில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வரவழைக்கப்பட்டு, அரசியல் வன்முறை மற்றும் இதர குற்றங்களைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்குநிலவரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டியதிருக்கும் என்று கூறப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமைகுறித்து ஆளுநர் ஜக்தீப் தன்கரின் அறிக்கை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசியத்தலைவர் நட்டாவின் வருகையின்போது பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை மாநில அரசுதரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்தத் தாக்குதலுக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இந்தத்தாக்குதலில், குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்திய காரில் சென்ற ஜெ.பி.நட்டா பாதிப்பு இன்றி தப்பியபோதும், அவருடன் சென்ற பிற பாஜக தலைவா்களின் காா் கண்ணாடிகள் உடைந்ததோடு, சிலா்காயமும் அடைந்தனா்.

One response to “மேற்கு வங்க டிஜிபி ,தலைமைச் செயலருக்கு சம்மன்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...