மே.வங்கத்தில் ஆளும்திரிணமுல் காங்கிரசிலிருந்து இரண்டுதலைவர்கள் விலகிய நிலையில், மற்றொரு எம்எல்ஏ., கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
மே.வங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபைதேர்தல் நடைபெற உள்ளது. திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்நிலையில், திரிணமுல் காங்கிரசில் இருந்து சுவேந்து அதிகாரி மற்றும் ஜிதேந்திர திவாரி ஆகியோர் விலகினர். தங்களது விலகலுக்கான கடிதத்தை, கட்சிதலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியிடம் வழங்கியுள்ளனர்.
இன்னும் சிலநாட்களில் அமித்ஷா மேற்கு வங்கத்திற்கு செல்ல உள்ளார். அப்போது, இருவரும் , அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. அதில் சுவேந்து அதிகாரி, கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் . அக்கட்சியின் உள்ளூர் தலைவர்கள் 50 பேர் இவரின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என தெரிகிறது. மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் கடந்தமாதம் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் கட்சியில் இருந்தும் விலகினார். இன்னும் சில அதிருப்தியாளர்கள், ஆளுங்கட்சியில் இருந்துவிலகி பா.ஜ.,வில் இணையக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ்கட்சி எம்எல்ஏ., ஷில்பத்ரா தத்தாவும் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில், 2 நாளில் 3 எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து விலகியது திரிணமுல் காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி யுள்ளது.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |