வாரிசு அரசியல் என்பது, புது வடிவ சர்வாதிகாரம்

”ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரியாக விளக்கும் வாரிசு அரசியல், ஒரு புதுவடிவ சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கிறது. இதை ஒழிக்க வேண்டுமெனில், இளைஞர்கள் அரசியலில் ஈடுபடவேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பார்லிமென்டின் மைய மண்டபத்தில் நேற்று நடந்த, தேசிய இளைஞர் பார்லிமென்ட் திரு விழாவின் இரண்டாம் ஆண்டு நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:குடும்பப் பெயரை பயன்படுத்தி, தேர்தலில் வெற்றிபெறும் நடைமுறை, கணிசமாக குறைய துவங்கி உள்ளது. அதேநேரம், வாரிசு அரசியல் முழுதுமாக ஒழியவில்லை.நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுவதற்கு, இந்த வாரிசு அரசியல் மிகப்பெரிய காரணமாக உள்ளது.

தங்கள் குடும்பத்தை சேர்ந்த முந்தைய தலைமுறையினர், தாங்கள்செய்த ஊழல்களுக்கு தண்டிக்கப்படாதது, புதிய தலைமுறை அரசியல்வாதிகளுக்கு தைரியத்தை அளிக்கிறது.சொந்த குடும்பத்திலேயே பலஉதாரணங்கள் இருப்பதால், அவர்கள் சட்டத்தை மதிப்பதில்லை. நம்மை யாரும் எதுவும் செய்யமுடியாது என்ற தைரியத்துடன் உள்ளனர். தங்கள் குடும்பத்தையும், குடும்ப அரசியலையும் மட்டுமே பாதுகாக்க நினைக்கும் சுயநல அரசியல் தலைவர்கள் இன்றைக்கும் உள்ளனர்.

இவர்களால், நாட்டின் ஜனநாயகம் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. வாரிசு அரசியல் என்பது, புது வடிவ சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கிறது. அதன் திறமையின்மை, நாட்டுக்கு பெரும் சுமையாகிறது.நேர்மையானவர்களுக்கு, மக்கள் ஆட்சியில் இடம்அளிக்க துவங்கிவிட்டனர். எனவே, நாட்டின் நலனுக்காக, இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்.மற்ற துறைகளைகளில் உள்ளதைபோல, இளைஞர்களின் புதிய சிந்தனை, கனவு, உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவை, அரசியலுக்கும் தேவை.இவ்வாறு, அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...