இம்முறை, இந்தியாவின் பட்ஜெட்டில், வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என கூறி, பட்ஜெட் அறிவிப்புகளை வரவேற்றுள்ளது, பன்னாட்டு நிதியம்.
இதுகுறித்து, பன்னாட்டு நிதியத்தின் தகவல்தொடர்பு இயக்குனர் ஜெர்ரி ரைஸ் கூறியதாவது: இந்தியாவின் பட்ஜெட், வளர்ச்சியில் மிகுந்தகவனம் செலுத்தி உள்ளது. குறிப்பாக, ஆரோக்கியம், கல்வி, பொது உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப் பட்டுள்ளது.இவை முழுமையாக அமல்படுத்தப் பட்டால், இந்தியாவின் வளர்ச்சி மேலும் வலுவானதாக அமையும்.
பட்ஜெட்டில், உணவு மானியங்களை சேர்ப்பதன்மூலம், நிதி வெளிப்படை தன்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதையும் நாங்கள் வரவேற்கிறோம். அதேபோல், நிதித்துறையை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், மேலும், அதுகுறித்த நடவடிக்கைகளின் விபரங்களை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |