இந்திய பகுதிகளை சீனாவிடம் விட்டுக்கொடுத்தது யார் என்று தாத்தா நேருவிடம்தான் ராகுல் கேட்க வேண்டும்

இந்திய பகுதிகளை சீனாவிடம் விட்டுக் கொடுத்தது யார் என்று தாத்தா நேருவிடம்தான் ராகுல் கேட்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் கிஷன்ரெட்டி கூறியுள்ளார்.

பான்காங் ஏரி அருகே பிங்கர் 4 பகுதியில் இருந்து நமது ராணுவம் விலக்கி கொள்ளபட்டது ஏன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கு லடாக் எல்லையில் உள்ள நிலவரம்தொடர்பாக நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டார். இப்போது, நமது படைகள் பிங்கர்-3 மலைப்பகுதிக்கு செல்வதாக அவர் கூறினார். பிங்கர்-4 பகுதி நமது மலைப்பகுதி. இப்போது, அந்த பிங்கர்-4 பகுதியில்இருந்து பிங்கர்-3 பகுதிக்கு நமது படைகள் சென்றுள்ளன. நமது பகுதியை சீனருக்கு ஏன் மோடி கொடுத்தார்? இந்த இடங்களில் இருந்து ராணுவம் விலக்கிகொண்டது ஏன்?

எல்லைகளை காக்க நமது ராணுவம், விமானப்படை, கடற்படை தயாராக உள்ளது. இந்திய படைகள் கைப்பற்றிய பகுதியை, சீனாவிற்கு பிரதமர் கொடுத்துவிட்டார். ஏப்ரல் மாதம் முதல் எல்லையில் பிரச்சனை நிலவிவருகிறது. தற்போது வரை சீனாவுடன் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்துவருகிறது. சீனாவை எதிர்க்க பிரதமர் மோடி பயப்படுகிறார். சீனாவுக்கு பணிந்து செல்கிறார். சீனாவிற்கு ஆதரவாகசெயல்பட்டு, இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் அவமதிக்கிறார் என ராகுல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில், முக்கிய மலைஉச்சியை சீனாவிடம் இந்தியா விட்டுக் கொடுத்துவிட்டதாக ராகுல் கூறியதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இந்தியபகுதிகளை சீனாவிடம் விட்டுக்கொடுத்தது யார் என்று தாத்தா நேருவிடம்தான் ராகுல் கேட்க வேண்டும். யார் தேசபக்தர், யார் தேச பக்தர் இல்லை என்பது மக்களுக்கு நன்றாகதெரியும் என மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...